siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

மடுமாதா தேவாலயத் திருவிழாவிற்கு விசேட ரயில் சேவை

 
புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
மன்னார், மடுமாதா தேவாலயத்தில் நடைபெறவுள்ள வருடாந்த திருவிழா வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ள மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத வணிக அத்தியட்சகர் ஜீ.டபிள்யூ.எஸ்.சிசிர குமார குறிப்பிட்டார்.
இதற்கமைய நீர்கொழும்பு மற்றும் மதவாச்சி ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக