siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

மோதிவிட்டுத் தப்பியது மோ.சைக்கிள் மாணவன் அந்த இடத்திலேயே சாவு; மாங்குளத்தில் நேற்றுப் பரிதாபம்

08.08.2012.
news
மாகாண மட்ட புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டி ருந்த மாணவனை மோதித் தள்ளிவிட்டுத் தலைமறை வாகியது மோட்டார் சைக் கிள்.சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தான்.இந்தச் சம்பவம் நேற்று மாங்குளத்தில் இடம் பெற்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது:
நேற்று மதியம் பரீட்சை முடிந்து வீடு செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்த சிறுவனை வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காது தப்பிச் சென்றது.சம்பவத்தில் குஞ்சுக்குளம் அ.த.க. பாடசாலையில் கல்விபயிலும் குஞ்சுக்குளம் மாங்குளத்தைச் சேர்ந்த கதிர்காமநாதன் கயந்தன் (வயது10) என்ற மாணவனே பலியானவராவார். கனகராயன்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக