siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

பிரிட்டன் கம்பனிக்கு எதிராக ஐ.தே.க முறைப்பாடு

 
08.08.2012.
இலங்கையில் நாணயத்தாள்களை அச்சடிப்பதற்காக நிறுவப்பட்ட “டி லா றூ” எனப்படும் பிரித்தானியக் கம்பனிக்கு எதிராக, பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயத்தில் ஐக்கிய தேசிய கட்சி முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பங்கு பரிவரத்தனை கம்பனியான “டி லா றூ” வினால் அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியுமெனவும் வேலை வாயப்புகள் உருவாகும் எனவும் கருதப்பட்டது.
ஆனால் அண்மைக்காலத்தில் ஒரு லத்தீன் அமெரிக்கா நாட்டிலிருந்து நாணய தாள்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு ஒப்பந்த வேலையை மத்திய வங்கி இந்த கம்பனிக்கு வழங்கியுள்ளது. அத்துடன் இந்த வேலைக்கான கேள்விப் பத்திரமும் கோரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே இக்கம்பனி அந்த நாட்டின் ஊழல் சட்டத்தின் கீழ் வருகின்றது.
குறித்த கம்பனி கொடுக்கல் வாங்கல் விடயத்தில் மத்திய வங்கிக்கு இலஞ்சம் அல்லது தரகு வழங்கியுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அறிய விரும்புவதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரித்தானய உயர்ஸ்தானிகராலயத்துடன் கலந்துரையாடவுள்ளோம்.
இதேவேளை, இப்படியான நாணயத்தாள் இறக்குமதி எதுவும் நடக்கவில்லையென மத்தியவங்கி ஆளுநர், அஜித் நிவாட் கப்ரால் கூறினார். நாம் விரும்பினால் எந்த நாட்டிலும் நாணய தாள்களை அச்சிடமுடியும்.
இது சட்டத்துக்கு முரணானது அல்ல. இருப்பினும் நாம் அப்படி செய்யவில்லை.“டி லா று” மூலம் இலங்கையில் நாணய தாள்களை அச்சடித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக