siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

டெசோ மாநாட்டிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்

 
08.08.2012.
சென்னையில் எதிர்வரும் 12 ம் திகதி இடம்பெறவுள்ள டெசோ எனப்படும் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு எதிராக, எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 12 ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு இடம்பெறவிருக்கின்றது. இதன்போது, கருணாநிதி தலைமையில் இலங்கையில் ஈழம் அமைப்பது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் தமது எதிர்ப்பை வெளியிட்ட போது இந்திய அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
எனவே, டெசோ மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 12ம் திகதி முற்பகல் 10 க்கு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக குணதாச அமரசேகர தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக