siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

பருத்தித்துறை படகுத்துறை மீண்டும் மீனவர் பாவனைக்கு ஒப்படைப்பு

திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012,பல வருடங்களாக இலங்கை அரசபடையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வரலாற்றுப் புகழ்மிக்க பருத்தித்துறை படகுத்துறை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
நீண்டகாலமாக யுத்தத்தின் கோரத்தினால் சிதைவடைந்துபோயிருந்த குறித்த படகுத்துறை அண்மையில் திருத்தப்பட்டு நேற்று காலை மீனவர்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.