siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

வடக்கில் கடும் வரட்சி: நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,வட பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் நன்னீர் மீன்பிடித்தொழில் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா நன்னீர் மீன்பிடியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் உறுப்பினரொருவர் கருத்துவெளியிடுகையில், தமது வாழ்வாதார தொழிலான நன்னீர் மீன்பிடித்தொழில் வரட்சி காரணமாக பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் மழை பொழிந்தாலும் குளங்களில் உள்ள மீன்கள் அழிவடைந்தயினால் தமது தொழிலினை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தாம் மாற்றுத்தொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளையோ அல்லது வாழ்வாதார உதவிகளையேனும் பெற்றுத் தருவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே. வடபிராந்தில் அதிக வரட்சி காரணமாக காட்டுப் பகுதிகள் தீக்கிரையாகி அழிவடைந்து வருகின்றது.இதன்காரணமாக அங்குள்ள ஏனைய வழங்களும் பாதிப்படைவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது