siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

குஷ்புவின் அரிய கண்டுபிடிப்பு!

20.08.2012.ஐநாசபையின் அதிகார பூர்வ இளைஞர் அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட நிலையில், தற்போது தனது தலைவர் கலைஞர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் அந்த கருத்தரங்கிற்கு நான் செல்லவில்லை என்று சொல்லியிருகிறார் குஷ்பூ. இத்தனை பெரிய நல்ல வாய்ப்பை உதறுகிற அளவுக்கு குஷ்பு அத்தனை பிஸியா என்று துலாவினால்,
கலைஞர் டிவிக்காக இவர் புதிதாக தொடங்கியிருக்கும் மெகா சீரியலுக்கு மூன்று மாதத்துக்கான 60 எபிசோட்களை விரைந்து கொடுக்கவே நைரோபிக்கு செல்வதை தவிர்த்து விட்டார் என்கிறார்கள்.
அம்மையார் ஒழுங்காக சீரியல் வேலையையும் கட்சி வேலையும் பார்த்தால் தப்பில்லை. ஆனால் தேவையில்லாமல் போகிற இடங்களில் ‘ தமிழருவி மணியன் ரேஞ்சுக்கு பேசி விடுவதல் செம கடுப்பில் இருக்கிறார்களாம் வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள். அப்படி என்னதான் பேசிவிட்டார் என்றால்,
“இன்றைய இளைய தலைமுறைகளிடம் தமிழ்மொழி உணர்வு குறைந்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார் நேற்று! தமிழ் மொழிக்காகவே தன் கட்சியை அர்பணித்திருப்பதாக சொல்லுகிற திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடைபெற்ற கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை குஷ்புவிற்கே அளித்திருந்தனர்.
மேடையில் தமிழ் உணர்வும், பகுத்தறிவும் பொங்கி வழிகிற அதன் தலைவர்களுக்கு முன், ‘பெரியார் கொள்கை’ என்று சொல்வதற்கு பதில் ‘பெரியார் கொள்ளை’ என்று பேசியவர்தான் நமது குஷ்பு!
தமிழ் சரியாக பேச வராத தன்னை, முக்கியமான தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, நடத்துனராக நியமித்து, அதில் தவறாக பேசிய பிறகும் தனக்கு கட்சியில் முக்கிய பதவியும் தந்த தன் கட்சியின் தமிழ் உணர்வை கிண்டல் செய்கிறாரோ என்னவோ?!
இப்படியே போனால் திமுகவில் கலைஞருக்கு அடுத்த இடத்தில் குஷ்பூ வந்தாலும் ஆச்சர்யமில்லை என்று காதைக் கடிக்கிறார்கள் திமுக வட்டாரத்தில்!