siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

வெள்ளவத்தை சம்பவம்: விசேட பொலிஸ் குழு நியமனம்

20.08.2012.வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட மூன்று சடலங்கள் குறித்த விசாரணைகள் தொடர விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் நேற்றுமுன்தினம் வீடொன்றில் இருந்து மூவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மகன் பிரகாஷ் குமாரசாமி கொட்டகலை டெலிகிளார் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு கடந்த 16 ஆம் திகதி வந்து சென்றதாக தோட்ட மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பத்தனை பொலிஸார் இந்தக் குறிப்பிட்ட தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்று உயிரிழந்தவர்களின் வீட்டினை அவதானித்த போது வீட்டின் முன்கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அத்துடன் அந்தக்கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

வீட்டினுள் சென்ற பொலிஸார் வீட்டிலுள்ள அறையொன்றில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதையும் அவதானித்துள்ளனர்.


இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது