siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய ஜெயராம்

20.08.2012.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் மலையாள நடிகர் ஜெயராம் ஓணம் கொண்டாடினார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்துக்கு நேற்று சென்ற நடிகர் ஜெயராம் அங்கு சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினார்.
மேலும் புத்தாடைகளும் வழங்கி அவர்களுடன் கொஞ்சி விளையாடினார். சில குழந்தைகளுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புற்றுநோய் என்பது அணு அணுவாக மனித உயிர்களை சாகடிக்கும் கொடிய நோய் ஆகும். இதன் மூல காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரபலங்கள் முதல் சிறு குழந்தைகள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடை பிணங்களாக வாழ்வது பரிதாபத்துக்குரியதாகும்.
புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளேன். திருவனந்தபுரம் புற்றுநோய் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினேன்.
எந்த பாவமும் அறியாத அக்குழந்தைகளின் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்கின்றபோது கவலை நம்மை குடிக்கொள்கிறது என்று கூறினார்.
மேலும், ஜெயராம் “அன்புள்ள கமல்” படத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.