siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கிளிநொச்சியில் இரவு 12 மணிக்கு பின்னர் தொடரும் சிங்களவரின் வெறியாட்டாம்!

 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.
 
இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில் தென்னிலங்கை சிங்களவர்கள் வடக்குப் பிரதேசங்களுக்கு சுற்றுலா வருவது தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இவ்வாறு வரும் சிங்களவர்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு இராணுவம் வசதிகளை செய்துகொடுக்கிறது. இவ்வசதிகள் புலிகளின் இடங்கள் எனக் கூறிக்கொண்டு, இராணுவம் தம்வசம் வைத்துக்கொண்டுள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் வீடுகளிலேயே வழங்கப்படுகின்றன.
இவ்வாறு கிளிநொச்சி திருநகர் பிரதேசம், கிளிநொச்சி நகரில் இருந்தும் சற்று உள்நோக்கி இருந்தப்போதும் அங்கும் தமிழர்களின் காணிகள் பல இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளவை தென்னிலங்கை சிங்களச் சுற்றுலா பயணிகளுக்கு தங்க இடமளிக்கப்படுகிறது.
இவ்விடங்களில் இரவு தங்கும் சிங்களவர்கள் இரவு 12:00 மணிக்கு பின்னரும் மதுபோதையில் "பைலா" எனும் பெயரில் கிடைக்கும் தகரம் தட்டுகளை அடித்து சிறு குழந்தைகள், வயோதிபர் என எவரும் நித்திரை கொள்ள முடியாத வகையில் பெரும் ஓசை எழுப்பி ஆடல் பாடல் என வெறியாட்டம் ஆடுகின்றனர்.
இதனால் இப்பிரதேச மக்களால் இரவு நேரங்களில் நித்திரைக் கொள்ள முடியாமலும், அச்சத்தினால் எவரிடமும் முறையிட முடியாத அவல நிலைக்கு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பிரதேச மக்கள் ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை காவல் துறையினரிடமோ, இராணுவத்திடமோ மக்கள் முறையிட்டால் முறையிடுபவர்களே தண்டனைக்கு உள்ளாவது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தமிழர் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளை முறையிடுவதற்கோ, முறையிட்டாலும் அதனை தீர்ப்பதற்கோ எவரும் அற்ற நிலைக்கே இன்று இப்பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்