siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சந்தனமடு ஆற்றுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி

28.08.2012.BY.tajah.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கள் அதிகாலை யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பலியானவர் களுவன்கேணியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (32 வயது) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் நேற்று அதிகாலை களுவன்கேணியிலிருந்து சந்தனமடு ஆற்றுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆற்றுக்கு அண்மையில் யானை குறுக்கிட்டு இவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.

நேற்றுக் காலை செங்கலடி வைத்தியசாலைக்குச் சடலம் கொண்டுவரப்பட்டபோது மாவட்ட வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மரண விசாரணையை நடத்தினார். சடலத்தை பலியானவரின் மனைவி கிருஷ்ணபிள்ளை மஞ்சுளா அடையாளம் காட்டினார். பிரேதப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலமான தாக்குதல் காரணமாக மண்டையோட்டுப் பகுதி நொருங்கியதால் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர் பொலிசார் சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.