siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நூதனசாலை கொள்ளைச் சம்பவம்: ஊடகங்களுக்கு வழங்கிய பொலிஸார் குறித்து விசாரணை

BY.rajah.
 
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
கொழும்பு நூதனசாலை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்ட காவற்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
காவற்துறை தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் வழங்கிய தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்ட அதிகாரிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது குறித்து காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிக்கையில்,
தகவல் வெளியாகமுன்னமே, ஊடகங்கள் இந்த கொள்ளை சம்பவத்துடன் பிரபல அரசியல்வாதி ஒருவர் இருப்பதாக தகவலை வெளியிட்டன. அதன் பின்னர், காவற்துறை ஊடகப்பேச்சாளர் இந்த செய்திக்கு மறுப்புக்களை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது