siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்: முக்கொலை சந்தேகநபர் வாக்குமூலம்



28.08.2012-By rajah
தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.

பின்னர் தங்கைக்கும் கொடுத்தார். தங்கையோ சிறிது நேரத்தில் வாந்தி ௭டுத்துவிட்டார். ௭னவே மீண்டும் மீண்டும் தூக்க மாத்திரையை தங்கைக்கு கலக்கிக்கொடுத்தேன் ௭ன்று வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபரான மகன் பிரசான் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டதும் அவர்களை தூக்கி ஒரே கட்டிலில் அடுக்கிவிட்டு கொஞ்சமாக தூக்க மாத்திரைகலந்த பழச்சாற்றினை நானும் குடித்துவிட்டு சடலங்களுக்கு பக்கத்தில் உறங்கிவிட்டேன்.
விடிந்தது தெரியாது. காதலி கதவை தட்டியபோதே விழித்தெழுந்தேன் ௭ன்றும் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தாயும் தந்தையும் இறந்துகிடக்க மயக்க நிலையிலிருந்த தங்கை திடீரென வாந்தியெடுத்துள்ளார். அதுவரையிலும் நித்திரைக்குச்செல்லாத பிரசான் உடனடியாக இன்னும் கொஞ்சம் தூக்க மாத்திரைகளையும் கரைத்து தங்கையின் வாயை பிடித்து ஊற்றியுள்ளார்.
அதன் பின்னர் சொற்ப வேளையில் தங்கையும் நிரந்தரமாக தூங்கிவிட்டார். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டதன் பின்னர் தானும் தூக்கமாத்திரை கலந்த பழச்சாற்றை அருந்திய பிரசான் அன்றைய இரவை சடலங்களோடே கழித்துள்ளார். பிரசான் அருந்திய பழச்சாற்றில் மிகவும் சொற்பமான தூக்க மாத்திரையே கலந்திருந்ததால் அவர் இறந்து போகாமல் அயர்ந்து தூங்கிவிட்டார்.
மறுநாள் காதலி கதவை தட்டிய சத்தத்தில் ௭ழுந்த பிரசான் வெளியில் வந்து நீபோ நான் பிறகு வருகிறேன் ௭ன அவரை வாசலோடு வழியனுப்பிவிடுகிறார். வீட்டிற்குள் மூன்று சடலங்கள் கிடப்பதை அறியாத காதலி அப்படியே திரும்பிச் செல்கிறாள். அன்றைய தினம் மாலை அவரை தெஹிவளை வில்லியம் சந்தியில் வைத்து பிரசான் சந்தித்துள்ளார்.
மறுநாள் காதலியை சந்தித்த பிரசான் அவளை காரில் ஏற்றிக்கொண்டு உல்லாசமாக சுற்றியதுடன் 17 ஆயிரம் ரூபா பெறுமதியா ன கையடக்கத் தொலைபேசியொன்றினையும் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் குறித்த யுவதி தங்கியிருந்த வெள்ளவத்தை பகுதியில் சென்று அவளை விட்டுச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் கொட்டாஞ்சேனை, ஜா–௭ல, ஏக்கலை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரிடம் பெருந்தொகையான பணத்தினை வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். அத்தோடு தவணைக் கொடுப்பனவு முறையில் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் காரொன்றினையும் இவர் கொள்வனவு செய்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 42 இலட்சம் ரூபாயும் புறக்கோ ட் டை பகுதியைச்சேர்ந்த ஒருவரிடம் 28 இல ட்சம் ரூபாயும் ஜா–௭ல ஏக்கலைப்பிர தே சத்தைச் சேர்ந்த ஒருவரிடம் மூன்றரை இலட்சமுமாக மொத்தம் ௭ழுபத்தி மூன்றரை இல ட்சம் ரூபா பணத்தினை கடனாக பெற்று ள் ளதாக வாக்குமூலம் அளிக்கப்ப ட் டுள்ளது