siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபர் பிரசான் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்

BY.rajah.
 
 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
வெள்ளவத்தை ராமகிருஷ்ண டெரஸில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று கொழும்பு நீதிமன்றில் வாக்குமூலம்
அளிக்கவுள்ளார்.
தம்மால் புரியப்பட்டதாக கூறும் மூன்று கொலைகள் தொடர்பில் அவர் கொழும்பு மேலதிக நீதவான் ஏ.நிஷாந்த முன்னிலையில் இன்று வாக்குமூலம் அளிப்பதற்கான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன…
ஹட்டன் - கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த பிரசான் குமாரசுவாமி என்ற குறித்த சந்தேக நபர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக நீதவான் குசலானி அயோத்யாவிடம் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அதன்போது முக்கொலைச் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வாக்குமூலம் அளிப்பது குறித்து மீண்டும் சிந்தித்து தீர்மானிக்குமாறும், அவ்வாறு வாக்குமூலம் அளிக்கப்பட்டால் அது மேல்நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணையின் போதும், கவனத்தில் கொள்ளப்படும் என்றும் நீதவான் கூறியுள்ளார்..
சந்தேக நபருக்;கு சட்டரீதியான ஆலோசனைகள் அவசியமாயின் அதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதவான் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய விசாரணையின் பின்னர் பிரசான் குமாரசுவாமியை எதிர்வரும் செப்டெம்பர் 4 ம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும் மேலதிக நீதவானால் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொல்லப்பட்டவர்களின் உடல் கூறுகள் அரச ரசாயண பகுப்பாய்வாளர் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கும் ஒப்படைக்கப்பட்டு ஆய்வுகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்