siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் திருமலையிலும், 8 பேர் மன்னாரிலும் கைது

 
புதன்கிழமை, 25 யூலை 2012
திருகோணமலை, சல்லிசம்பல் தீவு கடற்பரப்பு வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ஆண் மற்றும் பெண் ஆகியோர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிவேக கட்டளை 15 என்ஜின் பூட்டப்பட்ட படகு மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கி 7, என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, படகுமூலம் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் இலங்கையர் எட்டுப் பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக