siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

 
25.07.2012.
இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, சுற்றுலா விசாக்களின் மூலம் இலங்கையர்கள், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இரண்டு லட்ச ரூபா வழங்கியதாக 20 இலங்கையர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொழில் வாய்ப்பு இன்றி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறித்த இலங்கையர்கள், உயர்ஸ்தானிகராலயத்தில் சரணாகதி அடைந்துள்ளனர்.
எனவே மலேசியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கையர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக