siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு

_
25.07.2012மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் கலை அரங்கின் தலைவரும் ஆசிரியருமான ஹெலன் வரவேற்புரையும், கவிஞர் சு.முரளிதரன் தலைமையுரையையும், கலாநிதி .ந.இரவீந்திரன் ,பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வு நோக்கு எனும் தலைப்பில் சிறப்புரையும், லெனின் மதிவாணம் நினைவுப்பதிவுரையும், மல்லியப்பு சந்தி திலகர் நினைவுப்பகிர்வும், மலையக மக்கள் கலை அரங்கின் சார்பில் ஆசிரியர் வே.இராமர் கவிதை வாசிப்பும் இடம்பெற்றன.


மேலும் கலாநிதி.ந.இரவீந்திரன் மற்றும் மலையக மக்கள் அரங்கக் குழுவினர் பேராசிரியர்.கா.சிவத்தம்பிக்கு மரியாதை செலுத்ப்பட்டதோடு, இந்த நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை முன்னாள் கல்வி பணிப்பாளர் திரு.நாகலிங்கம் வழங்கிவைத்தார்

0 comments:

கருத்துரையிடுக