siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

யாழ்.நகரில் இரண்டு புடவைகள் கடைகள் எரிந்து நாசம் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் நாசம்



 
புதன்கிழமை, 25 யூலை 2012,
யாழ்.நகரிலுள்ள நடைபாதை புடைவைக் கடைகள் இரண்டு இன்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளதால் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ஆயினும் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
குறித்த கடைகளிலுள்ள மின்னொழுக்கு இவ்விபத்திற்கு காரணமாயிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் இதனை உறுதி செய்ய முடியவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

0 comments:

கருத்துரையிடுக