siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

மட்டு. காத்தான்குடி இளைஞர் ஒருவர் சவுதியில் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரொருவர் சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
இவ் இளைஞர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார்.
ஜித்தா நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிவந்த இவர், அக் ஹோட்டலின் 5 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் கூறினர்.
சடலம் ஜித்தா நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்

0 comments:

கருத்துரையிடுக