siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

வவுனியாவில் பெண் தொழிலதிபர் சடலமாக மீட்பு

 _
25.07.2012.வவுனியா கோவில்குளத்தில் உள்ள விடுதியொன்றிலிருந்து பெண் தொழிலதிபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், தெஹிவளை, வவுனியா ஆகிய இடங்களில் ‘வி கெயார்’ என்ற பெயரில் அழகுக்கலை நிலையத்தினை நடத்திவந்த கேதாரலிங்கம் விசாகினி (31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

வவுனியா ஹோட்டலுக்கு நேற்றிரவு இளைஞர் ஒருவருடன் விசாகினி தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த இளைஞரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இரவுப்பொழுதில் அவருடன் தங்கியிருந்ததாகவும் காலையில் விழித்துப்பார்த்தபோது விசாகினி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்ததாகவும் அந்த இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

0 comments:

கருத்துரையிடுக