siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

மைதா-ரவா சோமாஸ்

 

 

மேல் மாவிற்கு:
மைதா - அரை கப்;
ரவை பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்;
உப்பு - கால் டீஸ்பூன்;
நெய் - 1 டீஸ்பூன்;
பொரிப்பதற்கு - தேவையான அளவு எண்ணெய்.

பூரணத்திற்கு:
ரவை - அரை கப்;
துருவிய கொப்பரைத் தேங்காய் -அரை கப்;
பொடித்த அல்லது பொடியாக நறுக்கிய முந்திரி - 15;
சர்க்கரை - அரை கப்;
ஏலக்காய்த்தூள் - சிறிது; நெய் - அரை கப்.
திராட்சை - 5;
மேல் மாவிற்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசைந்து கெட்டியாக ஈரத்துணியில் மூடி வைக்கவும். நெய்யில் ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய் சேர்த்து வறுத்துக்கொண்டு ஆறியதும் ஏலக்காய்த்தூள், சர்க்கரைத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன அப்பளமாகத் தட்டி நடுவில் இந்த பூரணத்தை வைத்து தண்ணீர் தொட்டு மடித்து விருப்பமான வடிவத்தில் மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இதை இரண்டு நாட்களுக்குமுன் கூட செய்து வைக்கலாம்.

0 comments:

கருத்துரையிடுக