siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

ஓய்வூதியம் பெறுவதற்காக தந்தையின் சடலத்தை மறைத்து வைத்திருந்த நபர்

 
புதன்கிழமை, 25 யூலை 2012தந்தை இறந்ததை மறைத்து கடந்த ஏழு மாதங்களாக, அவருடைய ஓய்வூதியத்தை பெற்று வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பீஜிங் நகரை சேர்ந்தவர் லீ. இவருடைய தந்தை கடந்த ஜனவரி மாதம் இறந்துள்ளார்.
ஆனால் லீ தன் தந்தை தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, வெளியே சென்று விட்டதாக பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே லீ வீட்டிருந்து துர்நாற்றத்துடன் தண்ணீர் வருவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
உடனே அவர்கள் வந்து பார்த்த போது, லீயின் தந்தையின் உடல் அழுகிய நிலையில் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக, அவரது இறப்பை தெரிவிக்காமல் மறைத்து வைத்து, முறைகேடாக ஓய்வூதியத்தை பெற்ற லீ கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக