siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

அவுஸ்திரேலியா வரும் அகதிகளை கட்டுப்படுத்தக் கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 
புதன்கிழமை, 25 யூலை 2012
இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தக் கூடாது என, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்று பணிப்பாளர் பில் லின்ச் த மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து அகதிகள் வருகின்றமையை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவை கண்டனத்துக்கு உரியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அகதிகளுக்கு தடை விதிக்கப்படுவது என்பது, அகதி அந்தஸ்த்து கோருதல் உள்ளிட்ட சர்வதேச உரிமை மீறலாக கணிக்கப்படும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை அகதி அந்தஸ்த்து கோரிய நிலையில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடுகடத்தப்படுவதும், பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றவர்கள் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு ஆளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆட்கடத்தல் என்பது, சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு முரணானது என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக