siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 6 பிப்ரவரி, 2013

8 மாதக் குழந்தை டெங்கினால் மரணம்,,,,

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அஷ்ஷ_ஹதா பகுதியைச் சேர்ந்த றிமாஸா ஸீனத் என்ற 8 மாதக் குழந்தை ஆட்கொல்லி டெங்கு நோயினால் இன்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது. டெங்கினால் பாதிக்கப்பட்ட குறித்த 8மாத குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமையற்தொழிலில் ஈடுபடும் சபூர்தீன் என்பவரின் மகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவரது ஜனாஸா இன்று காத்தான்குடியில்; நல்லடக்கம் இன்று 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!

ரஷ்யாவின், தலைநகர் மொஸ்கோவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 216 சென்டிமீட்டர் அளவு பனி பொழிந்துள்ளது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 1.5 மடங்கு அதிகமாகும். பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது மொஸ்கோ நகருக்கும் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட் நகருக்கும் இடையேயான தூரத்துக்கு சமமானது . இந்த பனிப்பொழிவால் விமானப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செயப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லும் 155 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் பிரதமரின் விமானம் உள்ளிட்ட 56 விமானங்கள் வேறு இடங்களில் தரை இறக்கப்பட்டுள்ளன.

எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்

தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இலங்கையின் அரச தகவலை மேற்கோள் காட்டி இந்திய பிடிஐ செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று பீகார் புத்தகாயாவுக்கு செல்லும் ராஜபக்ச, 8 ம் திகதியன்று ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு செல்லவுள்ளார். இதன்போது பீகார் மாநில முதல்வர் நித்தேஸ்குமாரை அவர் சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அட்டவணைப்படி ஜனாதிபதியின் பயணம் அமையும் என்று இலங்கை அரச தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் விசா பெற முயன்ற இலங்கையர் இருவர் தமிழ்நாட்டில் கைது

தமிழ்நாடு, புதுவையில் பிரெஞ்சு தூதரகத்தில் பொய்யான பாஸ்போர்ட்டை அளித்து இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல வீசா அனுமதி கேட்பதாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இலங்கையைச் சேர்ந்த ஆண் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்ததாகவும், அந்தப் பெண் திருச்சியில் தங்கியிருந்ததாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும், தங்களது உண்மையான பெயர்களை மறைத்து போலி பாஸ்போர்ட் தயாரித்து பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல விசா பெற முயற்சித்ததாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்று புதுவை மாநில பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ். ராமராஜு தெரிவித்தார்