siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் சிறுமி ஒருவர் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்கொலை தாக்குதலை 10 வயதுடைய சிறுமி ஒருவரே மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பொர்னோ மாகாணத்தின்
 மைடுகுரி நகரத்திலுள்ள சந்தை தொகுதியில் இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி தனது உடலில் குண்டுகளை பொருத்தியிருந்த நிலையில் அவற்றை வெடிக்க செய்ததாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

துப்பாக்கி சூடு: இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயம்

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய
 துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் நடந்த இடத்திற்கு அந்நாட்டு உள்துறை மந்திரி பெர்னார்ட் கசெனுவ் விரைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏவுகணை பிரிவு அதிகாரியாக பெண் ஒருவர் நியமணம்!

இங்கிலாந்து விமானப் படையின் ஏவுகணை தாக்குதல் பிரிவுக்கு, முதன் முறையாக பெண் கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கி தோமஸ் என்ற அந்த 36 வயது வீராங்கனை, இங்கிலாந்து விமானப் படையில் 12 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து பயிற்சி விமானியாக பணியாற்றினார். அத்துடன் ஆப்கானிஸ்தானில் 3 மாதங்கள் தங்கியிருந்து, அங்கு நடந்த 35 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.

ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசும் போர் விமானங்களில், ஆண் விமானிகளுடன் தனது திறமையை வெளிப்படுத்தினார். இத்தகைய சிறப்பு பெற்ற நிக்கி தாமஸ் நேற்று ஏவுகணை பிரிவின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், இங்கிலாந்து விமானப் படையின் ஏவுகணை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் கமாண்டர் என்ற பெருமையை நிக்கி பெற்றுள்ளார். இதுதொடர்பாக, இங்கிலாந்து ராணுவ செயலாளர் மைக்கேல் பாலோன் கூறுகையில், ‘ஆண்களை போலவே பெண்களும் போர் புரிவதில் திறமை வாய்ந்தவர்கள்.

இதுவரை அவர்களின் பணிகள் ராணுவத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. ராணுவத்தில் சேர்க்கும் போது அவர்களின் பாலினத்தை கருதாமல், அவர்களின் திறமையை வைத்து அங்கீகரிக்க வேண்டும். இத்தகைய திறமைமிக்க நிக்கி தாமஸ் தலைமையில் அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கு தனியே படைப் பிரிவு துவங்கப்படும்‘ என்றார்.

ஏவுகணை விமானப் படையின் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக எத்தகைய கடினமான பணிகளையும் எளிதாக மேற்கொண்டு இருக்கிறேன். இந்த கமாண்டர் பணியையும் மிகச் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பணியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று கருதுகிறேன். விமானப் படையில் பெண்களும் சேர்ந்து பணியாற்ற முன்வர வேண்டும்‘ என்று நிக்கி தாமஸ் பூரிப்புடன் கூறினார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>