siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

பீயர்போட்டி சோகத்தில் முடிவடைந்தது ??


உலகில் நாட்டுக்கு நாடு பல்வேறு வித்தியாசமான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
இதேபோன்று ஸ்பெயின் நாட்டின் முர்சியா மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பல்வேறு நபர்கள் பாட்டில், பாட்டிலாக பீர் பானத்தை வயிற்றுக்குள் தள்ளினர்.
இதில் கிராசிகா(வயது 45) என்பவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர் பீர் குடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆனால் இந்த வெற்றி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை, போட்டி முடிந்ததுமே இடைவிடாது வாந்தி எடுத்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், எவ்வித பலனும் இல்லாமல் போனது.
கோலாகல ஆரவாரத்துடன் நடைபெற்ற போட்டி இறுதியில் சோகத்தில் முடிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் 30 பேர் ?


ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற தொடர் கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் பகத்தாத்தின் பல பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வர்த்தக வலயங்களான கராடா, சூத்ரா, டொபிச்சீ, பஹய்யா, ஸபார்னியா போன்ற பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நோன்பு திறக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் மட்டும் 2500 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்களில் இவ்வாறு பாரியளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஷியா இனத்தைச் சேர்ந்த பிரதமர் தங்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதாக சுனி முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 

சிறைக் கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முடிவு


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இஸ்ரேல் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தங்கள் நாட்டு சிறையில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த சில மாதங்களுக்குள் ஆறாவது முறையாக இஸ்ரேலுக்கு வந்தபோது, நடந்த நான்கு நாட்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில்,
ஜோன் கெரி அடுத்த வாரத்தில் இதுகுறித்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கலாம் என்று அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டினால்தான், மற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதால் ஜான் கெர்ரி இதில் தீவிரமாக முயற்சி செய்தார் என்று பத்திரிகையாளர் செய்தி தெரிவிக்கின்றது.
இஸ்ரேலிய மனித உரிமை கழகத்தின் கணக்கீட்டின்படி 4,817 பாலஸ்தீனியர்கள் கைதிகளாக உள்ளதாகவும், அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகின்றது.
பாலஸ்தீனியர்களும் அவர்கள் தரப்பில் கடந்த ஒன்பது மாதங்களாக சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வந்ததாக பிரதமர் லிகட் பெடிநோவின் கட்சி உறுப்பினரான ஸ்டெய்னிட்ஸ் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்ட வெஸ்ட்பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் நடைபெறும் கட்டுமானத் தீர்வு நிறுத்தம் போன்ற பாலஸ்தீனத்தின் முன் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டுமான நிறுத்தம் அல்லது இஸ்ரேலின் சலுகைகளோ, எல்லைகளோ வரையறுக்கப்படும் முன்னால் பாலஸ்தீனம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது கட்டுமானப்பணிகள் குறித்த விஷயத்தில் உடன்படிக்கை ஏற்படாததால் பேச்சுவார்த்தை நின்றுபோனது. இத்தகைய கட்டுமானங்கள் சர்வதேச விதிகளுக்கு முரணானவை என்றபோதிலும் இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது

சிறை விலைமாதர்களை விலை கொடுத்து வாங்கிய!!


இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோயின் மூன்று உதவியாளர்கள் விலைமாதர்களை விலைகொடுத்து வாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
17 வயதான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கென பணம் வழங்கிய குற்றச்சாட்டில் சில்வியோ பெர்ஸ்கோனிக்கு கடந்த மாதம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தம்மீதான குற்றச்சாட்டை சில்வியோ பெர்லஸ்கோனியும், குறித்த 17 வயதுப் பெண்ணும் நிராகரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராகவும்

ஆடம்பர திருமணம்: சீன தலைவர் கட்சியிலிருந்து?


மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் புதிய அதிபர் சி ஜின்பிங், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சீனாவின், ஹீபி மாகாணத்தின், பிங்டிங்பாவ் நகர கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலராக இருந்தவர் யூ ஷû வாங். சமீபத்தில், இவரது மகளுக்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் திருமணத்தை நடத்தினார்.
திருமணத்தின் போது ஏராளமான மொய் பணமும், அன்பளிப்புகளும் கிடைத்தன.
கட்சியின் சிக்கன நடவடிக்கையை மீறி செயல்பட்டதாக, இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இவர் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
திருமணத்தின் போது கிடைத்த மொய் பணம் மற்றும் அன்பளிப்புகளை திருப்பிக் கொடுக்கும்படி, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.