siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பிரான்ஸ் படைகள் நடத்திய பயங்கர???

 

ஆப்பிரிக்காவின் மேற்கே அமைந்துள்ள மாலி நாட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுக்கெதிராக போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
இதில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு, தமது படை வீரர்களை அனுப்பியது. எனவே இப்படைகள் மாலி அரசு இராணுவத்துடன் இணைந்து போராளிகள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஒடுக்கியது.
ஆனால் பதுங்கியுள்ள போராளிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பிரான்ஸ் அரசு தனது 4000 படை வீரர்களின் 1000 படை வீரர்களை நிரந்தரமாக மாலியில் நிறுத்தவும், மீதி இருக்கும் 3000 படை வீரர்களை இம்மாத இறுதிக்குள் திரும்பப்பெறவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1000 ராணுவ வீரர்கள் கொண்ட பிரான்ஸ் படை 'ஆபரேஷன் கஸ்டாவ்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலை, மாலியின் கோவா நகரத்தில் நடத்தியது.
பிரான்ஸ் ராணுவம் இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இதில் அதிக அளவில் டாங்கிகள், ஹெலிகொப்டர்கள், போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமிய குழுக்களின் கோட்டையாக கருதப்படும் மலைகள் சூழ்ந்த பகுதிகளில் பிரான்ஸ் படைகள் இந்த தாக்குதல் நடத்தி போராளிகளின் 340 பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும், மேலும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடிவிட்டதாகவும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
இதில் போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த தகவலை நேற்று பிரான்ஸ் அரசு வெளியிட்டது

போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ்.,.



வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
வடகொரியா அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் சுவிட்சர்லாந்தில் நடத்தலாம் என்று வெளியுறுவுத்துறையின் தகவல் தொடர்பாளி, சுவிஸ் நியுஸ் ஏஜென்சிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா தனது மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதால் ஐ.நா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதனால் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தென்கொரியாவில் படைவீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்ததின் பெயரில் போருக்கான அறை கூவல் வடகொரியாவிடமிருந்து வந்ததுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு வடகொரியா சென்று வந்த சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் மிச்சலீன் கேமி ரே(Micheline Calmy-Rey) ஊடகத்திற்கு அளித்துபேட்டியில், அந்நாடு வெடிபொருள் கிடங்காகத் திகழ்கிறது என்றும் ஒரு தீப்பொறி விழந்தால் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தாயகம் திரும்பலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வடகொரியா போருக்குத் தயாராகி வருவதை உணர்த்துகிறது.
இதனால் வடகொரியாவில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை தாயகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளை சுவிஸ் செய்து கொடுக்கும் என்று சுவிஸ் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் சுவிஸ் வெளியுறுவத்துறை தனது இணையதளத்தில் இருந்து பயணிகள் வடகொரியாவிற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளன