siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 4 மார்ச், 2013

நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல்


பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.
பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.
இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

குழு தாக்கியதில் மலேசியாவில் 5 பொலிஸார்,,,


மலேசியாவின் கிழக்குப்பகுதி சாபா மாகாணம் போர்னியோ தீவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம், லஹாத் டாடு மாவட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 100 பேர் படகில் வந்து இறங்கினர்.
பின்னர், அவர்கள் தங்களை சூலூ ராயல் ராணுவம் என்று சொல்லிக்கொண்டு அப்பகுதி கிராமம் ஒன்றை ஆக்கிரமித்து கொண்டதோடு இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதற்கு 19 நூற்றாண்டு பதிவேடுகளை அவர்கள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், நேற்று இரவு பொலிஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 5 பொலிஸாரும், 2 ஆயுதம் ஏந்தியவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த தாக்குதலில் 12 பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும், 2 மலேசியா பொலிஸாரும் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சாபா மாகாணம், 1800-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் மன்னர் சூலு ஜமாலுல் கிராம் சூல்தானின் கட்டிப்பாட்டில் இருந்து, பின்னர் 1963-ம் ஆண்டு மலேசியாவிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது