siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

10 தனியார் தொலைக்காட்சிச் சேவைகளை ஒரே நேரத்தில் தடை//


 இந்த அதிரடி நடவடிக்கை ஷைட்டி முஸ்லிம்களால் ஆளப்படும் ஈராக்கில் கடந்த ஒரு வாரத்துக்குள் சுன்னி போராளிகளுடன் மூண்ட மோதலில் 180 பேர் வரை கொல்லப் பட்டதையடுத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட சேனல்களில் 8 சுன்னி முஸ்லிம்களுக்குச் சார்பாகவும் ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கினை விமர்சித்து வந்தவை எனவும் கூறப்படுகின்றது. இது மட்டுமன்றி ஈராக் அரசு சுன்னி முஸ்லிம்களால் அவ்வப் போது மேற்கொள்ளப் படும் ஆர்ப்பாட்டங்களையும் இராணுவக் கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இறுதியாக ஹாவ்ஜா எனும் நகர மத்தியில் மேற்கொள்ளப் பட்ட சுன்னி பேரணியினை அடக்க முயன்றதில் 23 பொது மக்களும் 3 இராணுவத்தினரும் பலியாகியிருந்தனர்.
 இந்நிலையில் குடா நாடும் எண்ணெய் வளம் மிகுந்ததுமான கட்டாரினைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அல்ஜசீரா ஈராக்கின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் மிகுந்த ஏமாற்றத்தினை அடைந்திருப்பதாகக் கருத்து வெளியிட்டுள்ளது. அல்ஜசீரா மேலும் கூறுகையில் நாம் பக்கச்சார்பின்றியே ஈராக்கில் நடக்கும் சம்பவங்களைப் பல வருடங்களாக ஒளிபரப்பி வந்ததாகவும் ஒரே நேரத்தில் 10 சேனல்களைத் தடை செய்வது என்பது அடக்கு முறையையே குறிப்பதாக அமையும் எனவும் இது உலக நாடுகளுக்கு வெளிப்படை எனவும் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்களுக்கிடையே அடிக்கடி நடந்து வரும் மோதல்களில் பலர் பலியாகி வருகின்றனர். இது குறித்த செய்திகளைப் பாரபட்சமின்றி ஒளிபரப்பி வருவதால் அந்நாட்டில் இயங்கும் அல்ஜசீரா உட்பட 10 முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளை அதிரடியாக ஈராக் அரசு தடை செய்துள்ளது,தடை செய்யப் பட்டவற்றில் அல் ஜசீரா, அல் ஷரீக்கியா, பாக்தாத், பலுஜா, அல்-கர்பியா, ஆகியவை முக்கியமானவை ஆகும்.

இளநரையை போக்க வழிகள்??


 
   - பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.
  - தேங்காய் ௭ண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த ௭ண்ணெய்யை தினசரி தலைக்கு தேய்த்து வர கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும்.
   - உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு ௭டுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த ௭ண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை படிப்படியாக மாறுவதை காணலாம்.
    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.
  - தேங்காய் ௭ண்ணெயில் ௭லுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
  இன்றைக்கு 15 வயது முதலே ஆண், பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.
யோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது,

திங்கள், 29 ஏப்ரல், 2013

உண்மைக்கு இடமில்லை! ஹிருனிகா -


இந்த நாட்டில் உண்மைக்கு இடமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
 நடக்கும் எல்லா விடயங்கள் பற்றியும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
 துமிந்த சில்வா தொடர்பில் தீர்மானிக்கும் ஆற்றல் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.
நான்கு குடும்பங்களைச் சீரழித்த துமிந்த சில்வா, ஜனாதிபதியிடம் ஆசி பெற்றுக்கொள்ள சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நியாயம கோர உள்ளதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
 இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது – சஜித் பிரேமதாச
 இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 உள்நாட்டுக்கு ஒரு முகத்தைக் காட்டும் அரசாங்கம் வெளிநாட்டுக்கு வேறு முகத்தை காட்டி வருகின்றது.
 போர் வெற்றி குறித்த பிரச்சாரங்களைத் தவிர நாட்டி வேறு எந்த அபிவிருத்தியும் கிடையாது.
 நாட்டின் அபிவிருத்தியை சோடா போத்தல் அபிவிருத்தியாக அடைளப்படுத்த முடியும்.
 மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அரசாங்கம் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கேஸ் கசிவு ஏற்பட்டு அடுக்கு மாடிக்கட்டிடம் இடிந்து ?


பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரெய்ம்ஸ் நகரின் மையப்பகுதியிலுள்ள லில்லே என்ற ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
4 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் ஒரு வீட்டினுள் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி கீழே இடிந்து விழுந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்
 

தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்:,,


ஈராக் நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அன்பர் மாகாணத்தில் நேற்று 5 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹவிஜா நகரில் உள்ள சன்னி பிரிவினர் முகாமின் மீது ஈராக் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 170 பொதுமக்கள் பலியாகினர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக சன்னி தீவிரவாதிகள் மேற்கு மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
நேற்று, அன்பர் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது அன்பர் மாகாணத்தின் ரமாடி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
 

சிறைச்சாலையில் இரு பிரிவினரிடையே கடும்?:


மெக்ஸிகோ நாட்டின் சான் லூயி போடோசி மாநிலத்தில் உள்ள, லா பிலா சிறைச்சாலையில் நேற்று கைதிகளின் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அவர்கள் ஒருவருக்கொருவர், வீட்டு உபயோகத்திற்காக செய்யப்பட கத்திகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது. ஆயினும், காவல்துறை தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகின்றது.
சிறைச்சாலைகளில் அளவுக்கு மேற்பட்ட கைதிகள் இருப்பதால், போதை மருந்துக் கும்பல்களிடம் இதுபோன்ற சண்டை சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 12க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதுவே இதற்கு முக்கிய காரணம் என்றும், இந்த செயல்பாடுகள் மாற்றப்பட்டால் தான் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் எனவும் அந்நாட்டின் மனித உரிமைக் கழகங்கள் தெரிவிக்கின்றன.
 

மூடப்போவதில்லை: புதிய விரிவாக்கத்திற்கு


நோவார்ட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் நியோன் என்ற ஊரிலிருந்து தனது மருந்து உற்பத்தியை மூடிவிடப் போவதாக அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது அதனை மூடப்போவதில்லை என்றும் 150பிராங்க செலவில் நிறுவனத்தை நவீனப்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.
மூன்றாண்டுகளில் 60 மில்லியன் பிராங்கும் அதனைத் தொடர்ந்து 2020ல் 90மில்லியன் பிராங்கும் முதலீடு செய்யப்பட்டு சிறப்பு மையமாக Centre of Excellence ஆக செயல்படும் என நோவார்ட்டிஸின் தலைவர் பாஸ்கல் ஃபிரானீசென் வியாழனன்று தெரிவித்தார்.
நோவார்டிஸ் நிறுவனம் ஒன்றரை ஆண்டுகள் முன்னரே மூடப்போவதாக தெரிவித்திருந்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் 320 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நிறுவன மேலாளர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் ஊக்கத்தொகை, சம்பள உயர்வு, வரி சலுகைகளை தியாகம் செய்தனர்.
இத்தகைய காரணங்களை தொடர்ந்து நோவார்ட்டிஸ் நிறுவனம் முதலீட்டை அதிகரித்து சிறப்பு மையத்தின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது.
 

ரஷ்யாவில் 140 இஸ்லாமிய தீவிரவாதிகள் ?,

அமெரிக்காவின் பொஸ்டன் மரதன் போட்டியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செச்ன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
 

சனி, 27 ஏப்ரல், 2013

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பு'''


இது தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி. ஜயசேன கூறுகையில்,
 புகையிரத ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடை கடந்த பல வருட காலமாக நீடித்து வருகின்றது. தற்போது பல்வேறு வகையிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெளிவுபடுத்தியபோதும் அது போதிய பயனை எட்டவில்லை.
 இந்நிலையில் எமது சம்பள உரிமை குறித்து போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுடன் பல நேரடி சந்திப்புக்களை மேற்கொண்டபோதிலும் வெறும் இழுத்தடிப்புகளே ஏற்பட்டது.
 இந்நிலையிலேயே புகையிரத ஊழியர் தொழிற்சங்கங்கள் பலவும் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பினை மேற்கொண்டு இறுதித் தீர்மானமொன்றை எடுத்தது. இதன் பிரகாரம் நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். இதனால் நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரதங்களும் ஸ்தம்பிதமடையும்.
 தொடர்ந்தும் அரசாங்கத்தின் பேச்சை நம்பி உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படாமையினால் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

 

அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்: பொப் கார்

இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
 அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 இலங்கைக்கு எதிராக  ஐக்கிய நாடுகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களித்தாகவும், தற்போது அமர்வை புறக்கணிப்பதானது வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்துவதுடன் இலங்கையை தனிமைப்படுத்துமெனவும் பொப் கார் குறிப்பிட்டுள்ளார்.
 மேலும் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் மற்றும் திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் பொப் கார் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை ..

..

வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்தது.
அதில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அங்கு தீயணைப்பு படையினரும், பொலிசாரும் இணைந்து இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர்களின் பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் இறந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 3 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு வெளியில் இருந்து தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று இரவில் மட்டும் 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிடம் இடிந்ததில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வங்கதேசம் நேற்று ஒரு நாள் துக்க தினம் அறிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு தேசிய கொடி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன
 

தென்கொரியா அழைப்பை நிராகரித்த வடகொரியா .,


தென்கொரியா எல்லையில் அமைந்துள்ள கெசாங் என்ற தொழில் மையம் ஒன்றில் வடகொரியா மற்றும் தென்கொரியா இரண்டும் கூட்டாக செயல்பட்டு வந்தது.
இந்த தொழில் மையத்தில் இரு நாட்டு தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் போர் பிரகடனம் செய்ததை தொடர்ந்து கடந்த 3ம் திகதி இந்த வளாகத்தை வடகொரியா மூடியது. இதில் பணிபுரிந்த தனது பணியாளர்களில் ஒரு பகுதியினரை கடந்த 9ம் திகதி தென்கொரியா திரும்ப அழைத்துக்கொண்டது.
ஆனால் மீண்டும் அத்தொழில் மையத்தை திறக்க பேச்சு வார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா நேற்று அழைப்பு விடுத்தது.
இதற்கு வடகொரியா இன்று காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த பேச்சு வார்த்தை அழைப்பை ஏற்கவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தென்கொரியா தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அழைப்பை மோசடியானது என்று கூறி இன்று வடகொரியா நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் தென்கொரிய தொழிலாளர்கள் 170 பேரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தென்கொரிய அரசு இன்று அறிவித்துள்ளது
 

14 வயது மாணவியுடன் செக்ஸ் உறவு: ஆசிரியருக்கு ?


தன்னிடம் படித்த மைனர் மாணவியுடன் செக்ஸ் உறவு கொண்ட இந்திய வம்சாவளி ஆசிரியருக்கு சிங்கப்பூரில் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றிய அரவிந்த் மேனன்(25) என்பவர் தன்னிடம் படித்த 14 வயது மாணவியுடன் நட்பாக பழகி, செக்ஸ் உறவு கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த மாணவி அரவிந்தை விட்டு விலக நினைத்துள்ளாள். இதனால் அவர் அந்த பெண்ணுடன் உறவு கொண்ட ஆபாச காட்சிகளை காட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் மீது கடந்த 2009ம் ஆண்டு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்பொழுது இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவசண்முகம், மாணவியுடன் உறவு கொண்ட காட்சிகளை காணொளி எடுத்து மிரட்டிய குற்றத்துக்காக அரவிந்த்க்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.
அரவிந்த் மீது மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

புதன், 24 ஏப்ரல், 2013

நிலஅதிர்வுகள்: அதிர்ச்சியில் உறைந்துள்ள ?,


சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக 1,300 முறை சின்னச் சின்னதாக அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கே உள்ள சிசுவான் மாகாணம் லுஷான் கவுன்டியில் யான் நகருக்கு அருகே 2 தினங்களுக்கு முன் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 13 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. 20 நொடிகள் வரை கட்டிடங்கள் அதிர்ந்தன.
தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டதால் பல கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏராளமானோர் வீடுகளை இழந்து சாலையில் தங்கியுள்ளனர். பல இடங்களில் தண்ணீர், மின்சார சேவை முடங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டிவிட்டது.
பலரை காணாததால் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 11 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 960 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லுஷான் பகுதியில் இடிபாடுகளில் இருந்து 91 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சின்னச் சின்னதாக ஏற்படும் அதிர்வுகள் 1300 முறை பதிவாகியுள்ளது. இதில் சில அதிர்வுகள் 5.4 ரிக்டர் அளவு வரைகூட பதிவானது. இதனால் நேற்றும் மக்கள் பீதியுடனே காணப்பட்டனர்

அமைச்சருக்கு மர்ம பார்சல்: வடகொரியாவின் மிரட்டலா?


தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின்னுக்கு மர்மப் பொடியுடன் கூடிய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்-க்வான் ஜின்னுக்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்தது.
அதில் வடகொரியாவுக்கு எதிரான அவருடைய நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்தும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் ஒரு கடிதம் இருந்தது.
மேலும் அந்த மர்ம பார்சலில் சந்தேகத்துக்குரிய வகையில் வெண்ணிற பொடித் துகள்களும் இருந்தன.
அந்த பொடியில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆராய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பார்சல் அனுப்பப்படுவதற்கு முதல் நாளான நேற்று முன்தினம் (திங்கள்கிழமை), கிம் க்வான்-ஜின்னின் அலுவலகத்துக்கு வெளியே அவருக்கும் தென்கொரிய அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வீசி எறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பகத்தில் போர்ப்பதற்றம் நிலவும் சூழ்நிலையில் எங்களை அச்சுறுத்தும் வடகொரியாவின் மற்றுமொரு முயற்சிதான் இந்தச் செயல் என தென்கொரிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

குழந்தை வரம் வேண்டுமா? “லிப் டு லிப்” வாழைப்பழ வரம் தரும்???


குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சி அளிக்கிறார் சாமியார் ஒருவர்.
கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள சாமியார் ஒருவர் குழந்தை வரம் தருகிறாராம்.
இதற்காக தன்னை நாடி வரும் பெண்களுக்கு வித்தியாசமான முறையில் வரம் தருகிறார்.
அதாவது சாமியாரிடம் வரும் பெண்கள், வாழைப்பழத்தை சாமிக்கு காணிக்கையாக படைப்பார்கள்.
அப்போது அதை எடுத்து சாப்பிடும் சாமியார் நன்றாக மென்று அதை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார்.
இந்த சேவைக்கு கவாள சேவை என்று பெயராம். குறிப்பாக இந்த வரம் எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானாம்.
ஆண்களுக்கு எலுமிச்சை கனியை வாயில் வைத்து சாமி துப்புவாராம், அதை ஆண்கள் துண்டில் கேட்ச் பிடிக்க வேண்டுமாம்
 

விஷம் கொண்ட 53 ராஜநாகங்கள் பறிமுதல் ??

கொடிய விஷம் கொண்ட 53 ராஜநாகங்கள் பறிமுதல்
கொடிய விஷம் கொண்ட காரில் கடத்தப்பட்ட 53 ராஜநாகங்கள் வியட்நாமில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ராஜ நாகங்கள் 5.5 மீட்டர் நீளம் வளரக்கூடியவை.
அதிக விஷம் உள்ள இந்த பாம்புகளை வியட்நாம் நாட்டினர் இறைச்சிக்காகவும், மருத்துவத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த வாரம் தலைநகர் ஹனோய் அருகே, சென்ற காரை பொலிசார் சோதனையிட்ட போது, அதில் 53 ராஜநாகங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ராஜநாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
 

சனி, 20 ஏப்ரல், 2013

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடவுள்ள எலிசபெத்,.,


பிரிட்டன்  ராணி எலிசபத் தனது பிறந்த நாளை அரண்மனையில் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளார்.
ராணி எலிசபத்தின் சரியான பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 21ம் திகதியாகும். ஆனால், அதிகார பூர்வமான பிறந்த நாள் யூன் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தனது 87வது பிறந்த நாளை தனிப்பட்ட முறையிலான விழாவாக அரண்மனைக்குள் எளிமையாக கொண்டாட ராணி முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் இன்று அறிவித்துள்ளது.
நாளை(ஞாயிறு) நள்ளிரவு 12 மணியளவில் ராணியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் விண்ட்சர் கிரேட் பார்க் பகுதியில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செய்யப்படுகின்றது.
இதே போல், ஹைடே பார்க் பகுதியில் 41 குண்டுகள் முழங்கவும் லண்டன் டவர் பகுதியில் 62 குண்டுகள் முழங்கவும் ராணிக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இறப்பு தகவல். திருமதி சுப்பிரமணியம் பூபதி


       
       
 
               பிறந்த இடம்:சிறுப்பிட்டி                         வாழ்ந்த இடம்:யேர்மனி
                                                          
       தாயின் மடியில் ,15.06.1939                மண்ணின், மடியில் ,17.04.2013
தமிழீழம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்ட்டில்  வதிவிடமாகவும் கொண்டிருந்த .சுப்பிரமணியம் பூபதி அவர்கள் 17.04.2013 புதன்கிழமை காலை 2.மணியளவில் காலமானார்.

இவர் காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும் காலம்சென்ற அப்பாக்குட்டி.சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும். பரமேஸ்வரியின் அன்புச்சகோதரியும். காலம்சென்ற கந்தசாமியின் மைத்துனியும் இராஜேஸ்வரி.குமாரசாமி .தேவராஜா ஜெயகுமார் தவராஜா.தவேஸ்வரியின் அன்பு தாயாரும். கந்தசாமி.காலம்சென்ற தர்மசீலன் .பேற்றா. சுதந்தினி.விஜயகுமாரி. பவானி. ஆகியோரின். மாமியாரும்..நித்யா.அரவிந்.மயூரன் . ஹிசான் .டிலக்ஷன். ஆகியோரின் அம்மம்மாவும்.சந்திரா.யானா. சன். சாமி. சுதேதிகா. தேவிதா. தேனுகா. தேவதி. சுதர்சினி.சுதர்சன். சுமிதா.மசேல்.றொபின். ஜுலியான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்.காலம் சென்றவர்களான. சின்னையா. பாலசிங்கம். சோதிப்பிள்ளை. ஆகியோரின் சகலியும்

காலம் சென்றவர்களான. சின்னத்துரை.இராசம்மா. பொன்னம்மா. நல்லையா.ஆகியோரின் மைத்துனியும் ராணி. சின்னக்கிளி. சோதிப்பிள்ளை .சுப்பிரமணியம் . காலம் சென்ற செல்வநாயகம் வள்ளிப்பிள்ளை. பூரணம்.சின்னக்கிளி. நகுலேஸ்வரி. காலம் சென்றபரா. சரசு .கோடீஸ்வரன் .கிருஸ்ணகுமார்.சுமதி.சாந்தலிங்கம்.ஆகியோரின் மாமியாரும்.

மகேந்திரன். காலம் சென்றவசந்தி சாந்தகுமாரி.ஸ்ரீகண்ணதாசன். நவரத்தினம். இராசதுரை.ஆகியோரின் பெரியம்மாவும் ஆவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 22.04.2013 திங்கள்கிழமை காலை.11.மணிமுதல் மாலை 3மணிவரை பின்வரும் (Wischlinger Weg 66 44379 Dortmund ) முகவரியில் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.

தகவல் பிள்ளைகள்`"  தொடர்புகளுக்கு:
. இராசேஸ்வரி-0231-379266-015211968487

 குமாரசாமி- 0304352235-015735631003

தேவராசா- 02315331577 (017649433890)

ஜெயகுமார் 0231-15064059-(015213677989)

தவராசா. 0231.9868697 (015256099405)

தவேஸ்வரி 02501-985835 ( 015739114878)  

 அன்னாரின்பிரிவால் துயர்  உறும்அனைவர்க்கும்எமது கண்ணீர்அஞ்சலி இந்த துயரத்தை உறவு இணையங்களும் அறியத்தருவதோடு அன்னாரின்ஆத்ம சாந்திக்காய் இறைவனைவேண்டுகிறது,
 

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன,,,,

,,,,,

பிரிட்டனில் நியூ கேஸ்டில் நகரில் அமைந்துள்ள மேயர் இல்லத்தில் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய பிரிட்டன் நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறியுள்ளார்
 

வரி ஏய்ப்புக்கு உதவிய சுவிஸ் அதிகாரிகள்: வழக்கு?


சுவிஸ் வங்கியாளர் ஸ்டீபன் பக்கும்(Stefan Buck), சுவிஸ் சட்டதரனி எட்கார் பல்ட்சரும்(Edgar Paltzer) அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்ற அமெரிக்கப் பணக்காரர்கள் பலருக்கும் சதி செய்து உதவி செய்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவின் சட்டத்துறை, இவர்கள் மீது சதி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நியுயார்க் நகரில் பதிவானது.
இது குறித்து அமெரிக்க சட்டதரனி அலுவலகம் தனது ஊடகக் குறிப்பில், பால்ட்சரும், பக்கும் தமது தொழில் திறமையால் அமெரிக்க வாடிக்கையாளர்களை வரி செலுத்த விடாமல் அரசை ஏமாற்றி சதி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வரி ஏய்ப்புக்காக சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய வங்கியான UBS, அமெரிக்கச் சட்டத்துறைக்கு 780 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது.
இதேபோன்று சுவிட்சர்லாந்தின் மிகப்பழைய வங்கியான வெஜிலின்(Wegelin) நிறுவனம், வசதிபடைத்த அமெரிக்கர்களின் வரி ஏய்ப்புக்கு உதவியதற்காக 58 மில்லியன் டொலர் அபராதம் செலுத்தியது. ஆனால் பால்ட்சரும், பக்கும் இன்னும் கைது செய்யப்படவில்லை. 56 வயது பால்ட்சர் இரு நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். 32 வயது பக் சுவிஸ் குடிமகன் ஆவர்.
இருவரும் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் தான் வசிக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை இவர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது
 

வியாழன், 18 ஏப்ரல், 2013

"செனட்" உறுப்பினருக்கு அனுப்பப்பட்ட விஷம் ??


அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த "செனட்" உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு மர்ம கடிதம் ஒன்று டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம் பிஸ் நகரில் இருந்த தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அதில் செனட் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விக்கர் இது குறித்து உளவுத்துறையிடம் அவர் புகார் செய்தார்.
அதை தொடர்ந்து அந்த கடிதம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனை நடத்திய போது அதில் "ரிசின்" என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது தெரியவந்தது.
கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த கடிதத்தை அனுப்பியது யாரென‌ தெரியவில்லை. இது குறித்து உளவுத்துறையும், பொலிசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். "செனட்" உறுப்பினர்களின் ஊழியர்களும் தீவிர விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், "செனட்" உறுப்பினர்களுக்கு வரும் மெயில் கடிதங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் பொஸ்டனில் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் "செனட்" உறுப்பினர் விக்கருக்கு கிடைத்தது.
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் "ஆந்த்ராக்ஸ்" விஷகிருமி பார்சல்கள் அனுப்பப்பட்டன. அதன் பின்னர் தற்போது விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது அமெரிக்க "செனட்" உறுப்பினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

புதன், 17 ஏப்ரல், 2013

வங்கி ரகசியங்களை வெளியிடக்கூடாது: சுவிஸ்?


சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி உவேலி மாரர்(Ueli Maurer) , சுவிஸ் வங்கிகள் தனது ரகசியக் காப்பு நடைமுறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வங்கி ரகசியம் என்பது மருத்துவ ரகசியம் போன்றது இதனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லை என்பதால் சுவிஸ் வங்கிகளில் பாதுகாக்கப்படும் ரகசியப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் அமெரிக்காவின் வெளிநாட்டு வங்கிக்கணக்கு வரி ஒத்துழைப்புச் சட்டத்திற்கு, மதிப்பளித்து சுவிஸ் அரசு நிறைய ஒத்துழைப்பு தந்துவிட்டது.
மேலும் வரி ஏய்ப்புப் பற்றிக் கேட்டதற்கு இதுபோன்ற தவறுகள் எல்லா துறைகளிலும் உண்டு. இதனைச் சரி செய்ய முயல வேண்டும் என்று பதிலளித்துள்ளார்
 

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

சீனா முதன்முதலாக வெள்ளை அறிக்கை வெளியிட்டது


உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ள ”சீன மக்கள் விடுதலை ராணுவம்” என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது.
அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டொலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந்த தென் சீனக்கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிடையே பிரச்சினையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சீனா வெளியிட்டுள்ள இந்த ராணுவ வெள்ளை அறிக்கை, ஒரு மிரட்டலின் அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது
 

பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பில் இருவர்?


அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது.தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால், மாரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன.
சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலீஸார், காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 2 பேர் பலியானதாவும் சுமார் 30 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஸ்டன் பொலீஸார் தெரிவித்தனர்.
இந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வரும் ஒபாமா, காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, நியூ யார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

திங்கள், 15 ஏப்ரல், 2013

அழைப்பை நிராகரித்தது வடகொரியா: போர் மூளுமா?


பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும்.
அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
தென் கொரியா தனது மோதல் போக்கைக் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு, தலைநகர் டோக்கியோவைச் சுற்றிலும் பேட்ரியாட் ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முதன்முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ள ?;



பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக பிந்தியா ராணா என்ற திருநங்கை போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது ஏன் என்பது தொடர்பாக பிந்தியா ராணா நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தான் அரசியலைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.
கடந்த 2004ம் ஆண்டு என்னைப் போன்ற ஒரு திருநங்கை இறந்துவிட்டார். அவரது பிரேதத்தை சொந்த ஊரான பஞ்சாப் மாகாணத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தோம். நானும் உடன் சென்றேன்.
ஆனால், விமானம் மூலம் பிரேதத்தை கொண்டு செல்வதற்குள் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. என்னையும் இறந்துப்போன என் தோழியையும் அதிகாரிகள் கேவலமாக பேசி கேலி செய்தார்கள்.
அவள் எப்படி செத்தாள் அவள் சாகும் அளவிற்கு நீ என்ன செய்தாய் என்று ஆபாசமாக கிண்டல் செய்தனர். எங்களைப் போன்ற திருநங்கைகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று எண்ணி அன்று மிகவும் வேதனைப்பட்டேன்.
அதிகாரவர்க்கம், தொழில்முறை அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரின் முகத்திரையை கிழிப்பதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
திருநங்கைகளின் அவலங்களை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசிடம் எடுத்துக்கூறி உரிய தீர்வு காணவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என மேலும் அவர் கூறினார்.
 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

தகராறு : துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்தது !


திஸ்ஸமகாராம - கங்கசிரிபுர பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தாண்டை வரவேற்று போடப்பட்ட பட்டாசு ஒன்று அருகில் உள்ள வீட்டில் விழுந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு போட்ட நபரின் குடும்பத்திற்கும் பட்டாசு விழுந்த வீட்டு குடும்பத்திற்கும் இடையில் சண்டை மூண்டுள்ளது.
இச்சண்டை விரிவடைந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகள் மேலதிக சிகிச்சைகளுக்கென கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடாத்திய கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்ஸமகாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

சனி, 13 ஏப்ரல், 2013

தொழில் நடத்துவது கடினம்: நெஸ்ட்லே ?,?


சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டங்கள் கடுமையாகிக் கொண்டிருப்பதால் இந்நாட்டில் தொழில் நடத்துவது எங்களுக்குக் கடினமாக இருக்கின்றது என்று உலகில் மிகப்பெரிய உணவுப்பொருள் நிறுவனத்தின் தலைவரான பிராபெக் லெட்மாதே( Brabeck-Letmathe) தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையே புதிய கருத்தொற்றுமை நிலவவேண்டும்.
மேலும் இந்த மூன்று துறைகளிலும் தொழில் நடத்துவதில் ஏற்படும் சிரமங்களையும், சவால்களையும் புரிந்து கொண்டால் மட்டுமே சமனிலையில் நின்று தொழில்துறையை ஊக்குவிக்க முடியும் என்று ஆஸ்திரியாவைச் சேர்ந்த லெட்மாதே விரிவாக தெரிவித்துள்ளார்.
 

இரத்த வெறி பிடித்துவிட்டது: ஓரினச் சேர்க்கை,.,,,



பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளருக்குத் திருமண அந்தஸ்தும், குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையும் தரலாம் என்று நேற்று பிரெஞ்சு மேலவையில் மசோதா தாக்கலானது.
இதனால் வெகுண்டெழுந்த ஓரினச் சேர்க்கை எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி ஹேலாண்டுக்கு ரத்தவெறி பிடித்து அலைவதாகக் கண்டனக் குரல் எழுப்பினர்.
மேலும் வருகின்ற மே 26ம் நாள் அன்று பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பவர்கள் அறிவித்திருந்தனர்.
இது குறித்து மைய - வலது UMP கட்சியைச் சேர்ந்த கிறிஸ்ட்டியன் ஜேக்கப்(Christian Jacob) கூறுகையில், ஜனாதிபதி பிரெஞ்சு மக்களுடன் கடுமையாக மோதுகிறார் என்றும் இது ஒரு உள்ளூர்ப் போர் எனவும் சாடிவுள்ளார்
 

கண்காணிப்பாளர்களில்லாமல் பேசமுடிவதில்லை ?


சர்வதேச செஞ்ச்சிலுவைசங்கத்தினர், உலக நாடுகளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளைச் சந்தித்து பேசி, குற்றவாளிகளின் மனநிலையை சீராக்கவும், அவர்களது மனச்சுமைகளைக் குறைக்கவும் உதவுவர்.அவர்கள் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது யாருடைய குறுக்கீடும் இன்றி, தனிமையில் பேசுவது, குற்றவாளிகளுக்கும் எளிதான சூழ்நிலையை உருவாக்கும். ஆனால், உஸ்பெகிஸ்தானில் நிலைமை அதுபோல் இல்லை என்றும், கண்காணிப்பாளர்கள் இல்லாமல் தங்களால் குற்றவாளிகளுடன் தனிமையில் பேச முடிவதில்லை என்றும், அது அவர்களுக்கு எந்தப் பலனையும் ஏற்படுத்தாது என்றும் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்விஸ் டெக்கார்ட் தெரிவித்துள்ளார்.
எனவே, தங்கள் உறுப்பினர்கள் அந்நாட்டு சிறைக்கைதிகளை இனி சந்திக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இதுபோல் ஒருபோதும் நிகழ்வதில்லை என்றும், இந்த முடிவை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் டெக்கார்ட் குறிப்பிட்டார்.
செஞ்சிலுவை சங்கத்தினரின் முடிவு குறித்து, உஸ்பெகிஸ்தான் நாட்டு அரசு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவின் மனித உரிமை குறித்த செயல்பாடுகள், மேற்கத்திய பிரச்சாரக் குழுக்களிடையே, எப்போதுமே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. முறையான அரசியல் எதிர்க்கட்சிகள் என்று எதுவும் இல்லாத நிலையில், அந்நாட்டு ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன

: தலிபான்களின் தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள்


ஆப்கானிஸ்தானில் தற்போது சாதகமான பருவநிலை நீடிப்பதால் பாகிஸ்தானில் இருந்து ஏராளமான தீவிரவாதிகள் மலைவழியாக கிழக்கு ஆப்கானிஸ்தானுக்குள் சுலபமாக ஊடுருவி விடுகின்றனர்.இப்படி ஊடுருவிய தீவிரவாதிகள் உள்ளூர் தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.  குனார் மாகாணம், நாரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கூடாரம் மீது நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அந்த ராணுவ கூடாரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதீன் கூறினார்

ஓரினச்சேர்க்கைக்கான அகராதிப் பொருள் கண்டுபிடிப்பு/;


பிரான்சில் ஆண்களும் பெண்களும் தமக்குள் ஒரு பால் மண உறவு கொள்வதை சட்டம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், லாரோஸ்(Larousse) அகராதி ஒருபால் உறவையும் திருமணம் என்று பொருள் தந்துள்ளது.
இந்த அகராதியானது எதிர்வரும் 2014ம் ஆண்டில் வெளிவரும் இதில் திருமணம் என்ற சொல்லுக்குப் புதிய பொருள் தரப்பட்டுள்ளது.
அதாவது ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரோ வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்தவரோ இணைந்து வாழ தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் தந்துள்ளது.
முந்தைய அகராதிகளில் திருமணம் என்ற சொல்லுக்கு, ஆணும் பெண்ணும் இணைந்து வாழ நாட்டின் சட்டப்படி நடைபெறும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் காணப்பட்டது. புதிய அகராதி தேசியச் சட்டப்படி என்பதை நீக்கிவிட்டது. ஆணும் பெண்ணும் என்பதையும் மாற்றிவிட்டது.
வருகின்ற வாரங்களில் பிரெஞ்சு மேலவையில் ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா இயற்றப்படும். இந்த சூழ்நிலையில் இந்த அகராதியைச் சிலர் பாராட்டுகின்றனர். ஆனால் UMP கட்சியைச் சேர்ந்த ஹெர்வி மேரிட்டோன் என்பவர் ஒரு பால் உறவை கடுமையாக எதிர்த்தைப் போல இந்த அகராதியையும் எதிர்த்துள்ளார்.
மேலும் அகராதியில் இவ்வாறு பொருள் கூறி இருப்பது நாட்டின் ஜனநாயகப் பண்புக்கு எதிரானது என்றும் இப்போக்கை கடுமையாகக் கண்டித்து ஒடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இக்கட்சியின் துணைத்தலைவரான லாரண்ட் வக்கீசும் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதற்கிடையே இந்த அகராதியின் வெளியீட்டாளர்கள் விடுத்த ஓர் அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் திருமணம் என்பதற்கான பொருள் மாறி வருவதையே நாங்கள் அகராதியில் தெரிவித்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
 

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்



எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா ?


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வடகொரியா நடத்தும் போர் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியா தனது அண்டை நாடான தென் கொரியா மீது போர் பிரகடனம் செய்தது. பின்னர் தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், வட கொரியாவில் போர் நடப்பதை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களை காப்பாற்றவும் நட்பு நாடுகளை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளது.
மேலும் வடகொரியா தனது பகைமையான போர் அணுகுமுறையை நிறுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. இதனால் உலகிலுள்ள மற்ற நாடுகளைப் போல வடகொரியாவும் அடிப்படை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியா அணு ஏவுகணைகளை வருகின்ற நாட்களில் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்க பென்டகனின் உளவு பிரிவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 

கோலாலம்பூரில் திடீர் வெள்ளப்பெருக்கு,,

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோலாலம்பூரில் உள்ள முக்கிய சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டுநர் களுக்குப் போலிசார் உதவுகின்றனர்.

வியாழன், 11 ஏப்ரல், 2013

வெள்ளை மாளிகைக்கு அருகில் தரித்து நின்ற வாகனத்தால்,.,


வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எனவே, இங்க பலத்த காவலுக்கும், கெடுபிடிகளுக்கும் பஞ்சமிருக்காது.ஆனால், அதையும் மீறி இன்று அதிபரின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டடிருந்த அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் இன்று மூடப்பட்டன. மக்பர்சன் சதுக்கத்தில் உள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டது. வாகனம் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் இருபுறமும் செல்லும் பேருந்துப் போக்குவரத்தும் பாதிக்கப்படைந்தது.
அங்க நின்ற வாகனத்தால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

புதன், 10 ஏப்ரல், 2013

எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை: ??


சுமார் 900 கி.மீற்றர் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை அழிக்கவல்ல சக்தி வாய்ந்த 'ஹேட்ப்-4' ரக ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது.
'ஷாஹீன்-1' என்றும் அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது என்றும் இன்றைய சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து இதுவரை பாகிஸ்தான் ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களை சுமந்தபடி 60 கி.மீற்றர் வரை பாய்ந்து செல்லக்கூடிய 'ஹேட்ப்-9', ஆயிரத்து 300 கி.மீற்றர் தூரம் வரை பாயும் 'ஹேட்ப்-5' உள்ளிட்ட ஏவுகணைகளை அந்நாடு இதுவரை சோதித்துள்ளது.
போர் திட்டங்களுக்கான லெப்டினன்ட் ஜெனரல் தலைவர்(ஓய்வு) காலித் அஹமத் கித்வாய், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் பாகிஸ்தான் கடல் பகுதியில் இருந்து இன்றைய ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 

சிறுவனின் துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் ?


அமெரிக்காவில் 4 வயது சிறுவன் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனுடன் கடந்த திங்களன்று விளையாடி இருக்கிறான்.இதில் எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கியிலிருந்த குண்டு 6 வயது சிறுவனின் நெற்றியில் பாய்ந்து இருக்கிறது. இச்செய்தி சுட்டவனின் தாயாருக்கு தெரியவர, உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தெரிவித்து இருக்கிறார். அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அச்சிறுவன் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர நாடு தழுவிய விவாதங்கள் நடைபெறும் நிலையில் இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது. இதனால், உயிருக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கத்தவறிய பெற்றோர் மீது இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பிரான்ஸ் படைகள் நடத்திய பயங்கர???

 

ஆப்பிரிக்காவின் மேற்கே அமைந்துள்ள மாலி நாட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுக்கெதிராக போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
இதில் மாலி அரசுக்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு, தமது படை வீரர்களை அனுப்பியது. எனவே இப்படைகள் மாலி அரசு இராணுவத்துடன் இணைந்து போராளிகள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஒடுக்கியது.
ஆனால் பதுங்கியுள்ள போராளிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பிரான்ஸ் அரசு தனது 4000 படை வீரர்களின் 1000 படை வீரர்களை நிரந்தரமாக மாலியில் நிறுத்தவும், மீதி இருக்கும் 3000 படை வீரர்களை இம்மாத இறுதிக்குள் திரும்பப்பெறவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1000 ராணுவ வீரர்கள் கொண்ட பிரான்ஸ் படை 'ஆபரேஷன் கஸ்டாவ்' என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலை, மாலியின் கோவா நகரத்தில் நடத்தியது.
பிரான்ஸ் ராணுவம் இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இதில் அதிக அளவில் டாங்கிகள், ஹெலிகொப்டர்கள், போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமிய குழுக்களின் கோட்டையாக கருதப்படும் மலைகள் சூழ்ந்த பகுதிகளில் பிரான்ஸ் படைகள் இந்த தாக்குதல் நடத்தி போராளிகளின் 340 பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும், மேலும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடிவிட்டதாகவும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
இதில் போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த தகவலை நேற்று பிரான்ஸ் அரசு வெளியிட்டது

போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ்.,.



வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
வடகொரியா அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் சுவிட்சர்லாந்தில் நடத்தலாம் என்று வெளியுறுவுத்துறையின் தகவல் தொடர்பாளி, சுவிஸ் நியுஸ் ஏஜென்சிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா தனது மூன்றாவது அணு ஆயுத சோதனையை நடத்தியதால் ஐ.நா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதனால் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தென்கொரியாவில் படைவீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்ததின் பெயரில் போருக்கான அறை கூவல் வடகொரியாவிடமிருந்து வந்ததுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு வடகொரியா சென்று வந்த சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் மிச்சலீன் கேமி ரே(Micheline Calmy-Rey) ஊடகத்திற்கு அளித்துபேட்டியில், அந்நாடு வெடிபொருள் கிடங்காகத் திகழ்கிறது என்றும் ஒரு தீப்பொறி விழந்தால் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தாயகம் திரும்பலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வடகொரியா போருக்குத் தயாராகி வருவதை உணர்த்துகிறது.
இதனால் வடகொரியாவில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை தாயகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளை சுவிஸ் செய்து கொடுக்கும் என்று சுவிஸ் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் சுவிஸ் வெளியுறுவத்துறை தனது இணையதளத்தில் இருந்து பயணிகள் வடகொரியாவிற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளன