siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 மார்ச், 2014

திருடர்கள் பற்றி பொலிசார் எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோ பிராந்தியத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், முதியவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் ரொறன்ரோ பிராந்திய பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், திருடர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெரியவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்நேரத்தில் தங்களது கைவரிசையை காட்டுகின்றார்கள் என்றும், இந்நிலையானது பல்வேறு இடங்களில் இருக்கின்றது எனவும் எச்சரித்துள்ளனர்.
இதுவரையிலும் கிட்டத்தட்ட 12 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன எனத் தெரியவருகின்றது.
இதில் அனேகமான சம்பவங்கள் தனியாக வியாபார தலங்களுக்கு வருகின்ற நபர்களை குறிவைத்தே நடைபெறுகின்றது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருடவரும் நபர்கள், முதலில் தங்கள் மேல் நம்பிக்கை வரும்வகையில் பேசிபழகி பின் திருட்டை அரங்கேற்றுகின்றனர்.
அத்துடன் அவர் கள் தனியாக இல்லாது இருவாராகவோ அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகவோதான் இயங்குகின்றார்கள் எனவும், அவர்கள் முதியவர்களிடம் கொள்ளையிடுவது தமது தொழிலாகக் கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
பல தடவைகளில் போலியான தமது நகைகளைக் காட்டி மக்களிடமுள்ள தங்கத்தைக் களவாடியிருக்கின்றார்கள் எனவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்
 

தற்கொலை செய்யத் துடிக்கும் இராணுவ வீரர்கள்

அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கைகளில் இரு பிரிவினருக்கும் இடையே காணப்படும் நோய் விகிதங்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் மூத்த எழுத்தாளரும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசிரியருமான ரொனால்ட் கெஸ்லர் ராணுவத்தினரிடையே பெரும்பான்மையாகக் காணப்பட்ட மனத்தளர்ச்சி பொதுமக்களைவிட ஐந்து சதவிகிதம் அதிகமாகவும், இடைப்பட்ட சமயங்களில் வெடிக்கும் தன்மை கொண்ட கோளாறு ஆறு மடங்கு அதிகமாகவும், மனஉளைச்சலுக்குப் பிந்தைய சீர்கேடு 15 சதவிகிதம் அதிகமாகவும் காணப்பட்டதாக ஹார்வர்ட் செய்தி ஒன்றில் மேற்கோள் காட்டியுள்ளார்.

தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களிலும் 25 வீதமானவர்கள் மன நோய் சோதனைகளில் சாதகமான முடிவையே பெற்றிருந்தார்கள். அதிலும் 11 சதவிகிதத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தததாக கெஸ்லரின் ஆய்வு குறிப்பிடுகின்றது.
தற்கொலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 14 வீதமானவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்துள்ளனர். 5.3 வீதமானவர்கள் தற்கொலை பற்றித் திட்டமிட்டுள்ளனர். 2.4 வீதமானவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
மொத்தத்தில் இந்த மூன்று அறிக்கைகளிலும் ராணுவம் மற்றும் மனநோய் பற்றி ஒரு குழப்பமான வெளியீடுகளே காணப்படுவதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவத்தினரிடையே அதிகரித்துக் காணப்படும் தற்கொலை முயற்சிகளுக்கான விபரங்கள் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், தாங்கள் வெளியிட்டுள்ள இந்த விபரங்கள் ராணுவப் பணிக்கு வருவோருக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்