siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 25 ஆகஸ்ட், 2012

Avast அன்டி வைரஸின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,
பாதுகாப்பற்ற இணையத்தளப் பாவனை மூலமாகவும், ஏனைய சாதனங்களை பயன்படுத்துவதன் மூலமும் கணனியில் தொற்றிக்கொள்ளும் வைரஸ்களின் செயற்பாட்டை முடக்குவதற்கு அல்லது முற்றாக நீக்குவதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சிறந்த அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றாக கருதப்படும் Avast, 150 மில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாக இம்மென்பொருளானது காலத்திற்கு காலம் மேம்படுத்தப்பட்டு வெளிவிடப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது புதிய பதிப்பான Avast 7.0.1466 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது முன்னைய பதிப்புக்களைக் காட்டிலும் சில விசேட அம்சங்களை உள்ளடக்கியுள்ளதுடன் வினைத்திறனான வைரஸ் எதிர்ப்பையும் மேற்கொள்ளக்கூடியதாகக் காணப்படுகின்றது.
 

நான் (வீடியோ இணைப்பு)

25.08.2012.
விஜய் ஆன்டனி நடித்து தயாரித்திருக்கும் படம் நான். இவரது இசையில் 25வது படமாக வெளிவந்திருக்கிறது.
தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து கொள்வதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான் கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை, பொலிஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான்.
தனது சித்தப்பாவீட்டிற்கு அவன் போக கொலைகாரன் என்கிறாள் சித்தி. அதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பும் கார்த்திக் சென்னை போவதற்காக வண்டி பிடிக்கிறான். அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. தனது அருகில் உட்கார்ந்து பயணம் செய்த மெடிக்கல் கல்லூரியில் சேருவதற்காக சென்னை செல்லும், சலீம் அந்த விபத்தில் இறந்துவிட, சலீமின் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்னை போகிறான் கார்த்திக். தனது பெயரை மாற்றிக் கொண்டு சலீமாக மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். அங்கு அதன் பிறகு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை முழு நீளப் படத்தில் விரிவாக சொல்கிறது நான்.
படம் துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும் தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன், கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச் செல்கிறது திரைக்கதை.
ஆன்டனிக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. எப்போதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அவர் கார்த்திக் சலீம் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கின்றார். புகைப்படத்துக்காக நண்பனை விரட்டிச் செல்லும் போதும், எதிர்பாராதவிதமாக நண்பன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட, ஓ… என உரக்க அழும் காட்சிகளிலும் விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கின்றார்.
விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வருகிறார் சித்தார்த். இவருக்கு ஜோடியாக வருகிறார் ரூபா மஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மக்கஎல பாட்டுக்கு இவர் போடுகிற நடனம் இருக்கிறதே… அடேங்கப்பா… ரூபாவின் நடிப்பும் அவரது அழகும் கூடியிருக்கிறது.
அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில் வருகிறார்.
படத்திற்கு இசை விஜய் ஆன்டனி. தான் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதாலும், தனது 25வது படம் என்பதாலும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையை போட்டுத் தாக்கியிருக்கிறார். உலகினில் மிக உயரம்… செம டச்சிங்கான பாடல். மக்கஎல மக்கஎல பாடல் ஆட்டம் போட வைக்கிற ரகம். இனிமேல் பல பப்களில் இந்த பாடலுக்குதான் மவுசு. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை…’ பாடல் தத்துவ பாடல் போல் வருகிறது.
நான் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். முதல் காட்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றார் ஜீவா சங்கர். க்ளைமேக்ஸில் செம டச்சிங்கான சீனை வைத்து நம்மை அப்படியே மௌனமாக்கிவிடுகிறார்.


பாணந்துறையில் மூழ்கும் கப்பல்: பாரிய எண்ணைக் கசிவு அபாயம்: மூடிமறைக்கிறதா இலங்கை அரசு

25.08.2012.
 

பாணந்துறைக் கடலில் கடந்த 2 தினங்களாக ஒரு கப்பல் மூழ்கி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை சில சிங்கள ஊடகங்கள் வெளியிட்டபோதிலும் அவை சரக்குக் கப்பல் என்பதுபோன்ற செய்திகளே வெளியாகியுள்ளது. ஆனால் இக் கப்பலில் எண்ணெய் இருப்பதாக தற்சமயமே தெரியவந்துள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் முற்றாக மூழ்கத்தொடங்கியுள்ள இக் கப்பலில் இருந்து பாரிய எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இக் கப்பலில் இருந்து கசியும் எண்ணெய், கொழும்பு, காலிமுகத்திடலிருந்து 4 � 10 கடல் மைல் தொலைவில் காணமுடிகின்றது. இந்த எண்ணெய் கசிவு நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

இந்த எண்ணேய் கசிவு காலி வரை பரவிச் செல்ல வாய்பு இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.



தமிழ் மாணவிகளின் மோபைல் போன் நம்பரைக் கேட்கும் இராணுவத்தினர் !

 
25 .08. 2012 .
புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், கடந்த சில வாரங்களாக தமிழ் பெண்களோடு அதிகளவில் உரையாடிவருவதாகவும் , டியூசன் சென்று திரும்பும் மாணவிகளின் மோபைல் போன் இலக்கத்தைக் கேட்டு கடும் தொந்தரவுகள் கொடுப்பதாகவும் கூற்ப்படுகிறது. சிவில் உடையில் ஆயுதங்கள் தாங்கி நிற்கும் இராணுவத்தினர், வீதிகளில் செல்லும் தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து, பெரும் சேஷ்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மாணவிகள் வரும் சைகிளை மறிப்பதும், அவர்களோடு தமிழில் உரையாடி அவர்களின் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டுகின்றனர். பின்னர் தொலைபேசி இலக்கத்தை தந்துவிட்டுச் செல்லுமாறு இவர்கள் கோருவதாகவும் தமிழ் மாணவிகள் பலர் தமது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பல பெற்றோர், தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் முறையிட்டுள்ளனர். தமது பிள்ளைகள் பாதுகாப்பாகச் சென்று வர ஆவன செய்யுமாறு பெற்றோர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட பொலிசார்:

25. 08. 2012. by.rajah
கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் சமீபத்தில் கொள்ளை இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. பல பெறுமதிமிக்க அரிய பொருட்கள் களவாடப்பட்டது. இதனை அடுத்து பொலிசாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இருப்பினும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து பொலிசார் சிறப்பு அனுமதியைப் பெற்று சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளனர். இதனூடாகவே அவர்கள் சில தகவல்களைப் பெற்றுள்ளனர் எனப் பொலிசார் இன்று(25) தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கலாக சுமார் 8 லட்சம் உரையாடலை ஒட்டுக்கேட்ட பொலிசார் பின்னரே, சூத்திரதாரிகளைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது பொலிசார் கைதுசெய்துள்ள நபர்கள் நூதனசாலை கொள்ளையோடு உண்மையாகச் சம்பந்தப்பட்டவர்களா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் சில அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
16:40 25.08.2012
 

ரூ. 85 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அறிமுக நடிகை கைது


 Saturday, 25 August 2012,
அங்காடித் தெரு படத்தையடுத்து மகேஷ் நடித்த படம் 'கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு'.
இப்படத்தின் நாயகியாக புவனேஸ்வரி என்ற அறிமுக நடிகை நடித்தார். இவர்தான் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படத்திற்காக இவரின் தாயார் சம்பூர்ணம் அம்மாள் சென்னையைச் சேர்ந்த குருநாதன் (வயது 42) என்ற சினிமா பைனான்ஸியரிடம் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் தயாரிக்கும் படத்திற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் குருநாதனும் ரூ.85.50 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் அந்த பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்துள்ளார்கள். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது.
எனவே அந்த பணத்தைத் தராமல் சம்பூர்ணம் அம்மாள் ஏமாற்றி விட்டார் என சென்னை பொலிஸ் கொமிஷனர் திரிபாதியிடம் குருநாதன் நேற்று புகார் அளித்தார்.
சம்பூர்ணம் அம்மாள், அவரது மகள் நடிகை புவனேஸ்வரி ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கொமிஷனர் ராதிகா மேற்பார்வையில், துணை காவல் அதிகாரி நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதன் காரணமாக நடிகை புவனேஸ்வரி (வயது 22) நேற்று கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணையில், சினிமா தயாரிப்பு செலவுக்காக குருநாதன் ரூ.15 லட்சம்தான் கொடுத்தார்.
படம் சரியாக ஓடாததால் அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தனது வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர். அவர் மீது மோசடி உட்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புவனேஸ்வரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கதறி அழுதபடியே சிறைக்குச் சென்றார்.
 

அடுத்தமாதம் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு

25.08.2012.]
உலக நாயகன் கமலஹாசன் இயக்கி, நடித்து வரும் படம் விஸ்வரூபம்.
இதில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியாவும், அமெரிக்க மொடல் அழகி பூஜாகுமாரும் நடிக்கின்றனர்.
அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளன.
தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. கடந்த யூலை மாதம் டிரைலர் வெளியிடப்பட்டது.
அப்போதே படம் விரைவில் திரைக்கு வரும் என்று பேசப்பட்டது. அதுவும் டிசம்பரில் வெளியாக உள்ள கோச்சடையான் படத்திற்கு முன்னதாகவே வெளியிட கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்றும், ஒக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன் மனதிலும் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக பதுங்கி இருந்த கதை என்பதால், ரசிகர்கள் மனதிலும் அது தங்கும் என்று கமல் நம்பிக்கையில் இருக்கிறார்.
மேலும் கமல் படம் என்றாலே பல புதிய அம்சங்கள் இருக்கும். இதனால் கமலின் விஸ்வரூபத்தைக் காண அவரது ரசிகர்களும் மிக ஆர்வமாக உள்ளனர்.
 

ZeeTV தமிழ் Top 10 உலகம் – 25-08-2012

25.08.2012.
 

இந்த சிறு வயதில் இப்படியொரு ஆட்டமா!

25.08.2012.

 

 

 

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை

25.08.2012.கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை. அதனால் தான் ஒரு வருட காலத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையை அவர் கலைத்து விட்டார் ௭ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை வை.௭ம்.சீ.ஏ.மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கிழக்கு மாகாண சபை ஒரு வருட காலத்திற்கு முன்பாகவே கலைக்கப்பட்டமையை ௭திர்த்து வழக்குத் தொடரப்பட்டது.
பாவம் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் துரதிஷ்டம் அந்த வழக்கு தோல்வியடைந்துள்ளது. இதனால் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் முதலமைச்சராக இருக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரு ம் பவில்லை அதனால் தான் ஒரு வருட கால த்துக்கு முன்பே கலைத்து விட்டார்.
இதனைப் புரிந்து கொள்ளாமல் தான் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மீண்டும் முதலமைச்சர் தானே தான் ௭ன மனப்பால் குடித்துக் கொண்டு தேர்தலில் குதித்துள்ளார்.
முதலமைச்சராக மீண்டும் தமிழரென இவர்கள் நம்மக்களிடம் உசுப்பேத்துவது ஒரு போதும் செல்லுபடியாகாது. அதே போல் வடக்கை விடவும் கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பதில் முன்னிலையிலிருந்து வருகின்றனர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைத் தவிர வேறு ௭ந்தக் கட்சியிலிருந்தும் ௭வரும் தெரிவு செய்யப்படப் போவதில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் இதனை நிரூபணம் செய்தது போல் தமிழ் மக்கள் இம் முறையும் நிரூபணம் செய்வர். அடாவடித்தனம் கபட நோக்குடன் கிழக்கு மாகாண சபை யைக் கலைத்து தேர்தல் நடத்தி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனைந்துள்ள அரசும் அதன் அடிவருடிகளும் தேர்தல்கள் நிலைவரம் கண்டு கதிகலங்கி நிற்கின்றனர்.
இதனால் அடாவடித்தனத்தை கிழக்கில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. ௭னினும் இவை அத்தனைக்கும் முகம் கொடுக்கும் சக்தியை நாம் மக்களிடமிருந்து பெற்றுள் ளோம்.
மார் தட்டும் அரசு கிழக்கில் இடம்பெற்றுள்ள வீதி அபிவிருத்தி மற்றும் பால நிர்மாணப் பணிகளைத் தாமே வெட்டிப்பிடுங்கியதாக அரசும் அதன் அடிவருடிகளும் தம்பட்டமடிக்கின்ற நிலை மைகளை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. பிரான்ஸ் அரசு செய்ததையும் சுனாமி தந்த தங்கப்பரிசுகளையும் தான் ஏதோ தாம் பெரும் அபிவிருத்திகளைச் செய்ததாக தம்பட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனையெல்லாம் அரசின் முதலாவது பொய்யெனக் கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டும்.
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு கார்பட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது போல் தெற்கிலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வீதி அகலமாக்கப்பட்ட போது தமது நிலங்களை வழங்கிய வீதியின் மருங்கிலுள்ள நம்மவர்களுக்கு ௭ந்த நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.
ஆனால் தெற்கில் வீதி அபிவிருத்தியின் போது இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுக்கண் இந்த நிலைமைக்குக் காரணம். வெளிநாடுகளில் நன்கொடை நிதியில் தெற்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றமையும் கிழக்கில் மெல்லிய கடனாகப் பெறப்பட்ட நிதியில் நடைபெற்றமையுமாகும். இதன் மூலம் தெற்கை ஒரு கண் கொண்டும் வடக்கு, கிழக்கை மாற்றுக்கண் கொண்டும் அரசு பார்த்து வருகிறது.
ஆனால் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மக்களென அரசு மெய் சிலிர்க்கக் கூறிக் கொண்டிருக்கிறது. அபிவிருத்தி ௭னும் மாயையைக் காட்டி மக்களை ஏமாற்றுவதற்கும் இத்தேர்தல் களத்தில் பலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
உண்மையில் இவர்கள் கூறும் அபிவிருத்திகளெல்லாம் ஏழைகளுக்குக் கூப்பன் புத்தகம் வழங்குவது போன்றதாகும். கருணாவும் பிள்ளையானும் இல்லாவிட்டால் இவையொன்றும் வந்து விடாதா? நிச்சயம் வரும் அது அரசின் கடமையாகும். இதனை மஹிந்த சிந்தனையில் பார்க்காமல் நமது சிந்தனையில் நாம் பார்க்க வேண்டும்.
ஐ.நா சபை சாசன உறுதியுரையின் படி இறைமையுள்ள அரசு தன் நாட்டு மக்களுக்கு இன மதம் பாராது சேவை செய்ய வேண்டும். சிங்கப்பூரைப்போல் சிறுபான்மையினர் அவர்களது அபிலாசைகளுக்கு ஏற்ப உரிமை பெற்றவர்களாக வாழ வழிவகுப்பதே ஓர் அரசின் கடமையாகும். இந்தியா, கனடா, சிங்கப்பூர் உட்பட ஐரோப்பிய, ஆசிய நாடுகள் இதனைச் செய்துள்ளன.
௭னவே சிங்கப்பூர் போல் நாட்டை மாற்றுவதாகக்கூறும் அரசு இங்கும் சிங்கப்பூர் போல் ஏன் அரசியலை மாற்றக்கூடாது. முஸ்லிம்கள் அன்று காரியப்பர் தொடக்கம் செனட்டர் மசூர் மௌலானா வரை தமிழரசுக்கட்சி மேடைகளில் ஒரு முஸ்லிமாவது இல்லாதிருப்பது கிடையாது.
இன்று கிழக்குத் தேர்தலில் நம் கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் ஒருவர் போட்டியிடுவது பெரும் மன மகிழ்வைத் தருகின்றது. நல்ல சகுனம் தோன்றியுள்ளது.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகள் சோதனைகள் இன்று முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்டுள் ளன. தம்புள்ளை பள்ளிவாசலில் தொடங்கி ராஜகி ரிய வரைக்கும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீது பேரினவாதம் ஊழிக் கூத்தாடி வருகின்றது.
தந்தை செல்வா முதல் தமிழர் தலைமைகள் முஸ்லிம் மக்களை ஒரு போதும் புறக்கணித்து நடக்கவில்லை.
கிழக்கில் ஒரு சபையல்ல. இரு சபைகள் தேவைப்பட்டால் மூன்று சபைகள் அமைக்கலாமென முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கி அன்று தந்தை செல்வா தீர்க்க தரிசனமாகக் கூறினார். பேரினவாத அரசுகளால் 1949 களில் கல்லோயா திட்டத்தைக் கொண்டு வந்து சிங்களக் குடியேற்றங்களைச் செய்ய முற்பட்ட போது சம்மாந்துறை முஸ்லிம் தலைவர்களை அண்ணன் அமிர்தலிங்கம் கண்டு கதைத்து இத்திட்டத்தில் அரைவாசி தமிழ் பேசும் மக்கள் குடியேற்றப்பட வேண்டுமென்பதை நெறிப்படுத்தினார்.
அன்று புத்தளம் பள்ளிவாசல் பிரச்சினையில் முஸ்லிம் அமைச்சர்களிலிருந்தும் அதற்காகக் குரல் கொடுத்தது தமிழ்த் தலைவர்கள் தானென்பதையும் முஸ்லிம் மக்கள் ௭ளிதில் மறந்து விட முடியாது. இந்நிலையில் முஸ்லிம் மக்களும் கிழக்கில் அரசை ஆதரிக்கவில்லையென்ற உண்மையைத் தேர்தலின் பின்னரும் நிரூபிக்க முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும். தலைவிதி வட ,கிழக்கில் நம்மவர்கள் அமைச்சர்களாக மிகப் பாதுகாப்புடன் அரச அடிவருடிகளாக வலம் வருகின்றனர்.
ஆனால் நம் இளைஞர்கள் பாதுகாப்பின்றி அச்சுறுத்தலுடன் சிறையில் வாடுகின்றனர். மடிகின்றனர். இதுவே தமிழினத்தின் இன்றைய தலை விதியாகும். இயந்திரமா? ௭னவே ௭ம்மை நடுக்கடலில் தள்ளி விட்டு நிற்கும் அரசுக்கு இன்றும் வாக்களிக்கும் இயந்திரங்களாக தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இருக்க முடியுமா ௭ன்பதை சிந்தித்து கிழக்குத் தேர்தலில் நம்மக்கள் அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும் ௭னவும் தெரிவித்தார்

நடிகையின் ஹோட்டலில் விபசாரம் மூன்று பெண்களுடன் சார்ஜனும் கைது

25.07.2012.நடிகையொருவருக்கு சொந்தமான ஹோட் டலொன்றில் மிகவும் ரகசியமாக மேற் கொள்ளப்பட்டுவந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் இரு பெண்கள் அடங்கலாக மூவரை பாணந்துறை வலானை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகைக்கு சொந்தமான குறித்த ஹோட்டலில் விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்திவருவதாக வலானை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அக் ஹோட்டலை சோதனையிடுவதற்கான நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்றதன் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபசாரம் நடைபெற்றதாக கூறப்படும் அந்த ஹோட்டலில் ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் முகாமையாளராக இருந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள இரு பெண்களில் ஒருவருக்கு ஒரு வயதில் குழந்தையொன்றும் இருந்துள்ளது. அக்குழந்தையை ஹோட்டல் முகாமையாளரான சார்ஜண்ட் தாய் விபசாரத்தில் ஈடுபடுகின்றபோது கண்காணிப்பில் வைத்திருந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் விசாரணைக்குட்படுத்திவரும் பாணந்துறை வலானை பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்

சுவிஸில் நீச்சல் பயிற்சியின் போது காணாமல் போன இரு இலங்கையர்களில் ஒருவர் மீட்பு


25.08.2012.
 

சுவிட்சர்லாந்தின் ரிஆஸ் அருவியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன இலங்கையர்கள் இருவரில்  ஒருவர், ஆர்கௌ பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ரிஆஸ் அருவியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இலங்கை அகதிகள் காணாமல் போயினர்.
அவர்களில் ஒருவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் நீச்சல் பயிற்சி வழங்கிய ஆசிரியர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது கவனக்குறைவின் காரணமாகவே இவர்கள் காணாமல் போயினர் என உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு தண்டனை வழங்கப்படும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்

நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள்!- ஒருவர் பலி! 11 படுகாயம்

 
சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,
 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் - அனுராதபுரம் வீதியிலுள்ள 5ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை 1.45 அளவிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

முக்கொலை சந்தேகநபர் பிரசான் நகைகளை 5 இலட்சத்திற்கு அடகுவைத்தமை அம்பலம்



சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,
 

வெள்ளவத்தை முக்கொலை தொடர்பில் கைதான சந்தேகநபரான பிரசான் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் அடகுவைத்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 15,17 ஆகிய இரண்டு நாட்களில் கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள நகை அடகுபிடிக்கும் கடையொன்றில் பெருந்தொகையான தங்கநகைகளை கொண்டுசென்று அடகுவைத்து பணம் பெற்றுள்ளமை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தங்க ஆபரணங்களை சந்தேகநபரான பிரசான் கொட்டகலை ராணியப்பு தோடத்தில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிலிருந்து எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கொழும்புக்கு வந்து மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாகத் தொழில் புரிந்துள்ளார்.
அந்தஸ்துக்கு மீறிய விதத்தில் இரண்டு காதலிகளுடனும் வாகனங்களுடனும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த இவர் பணப்பிரச்சினை காரணமாக ஊருக்குச் சென்று தந்தையின் ஊழியர் நம்பிக்கை நிதியப்பணத்தைக் கேட்டுள்ளார்.
தந்தை அதனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இவர் தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவின் படி மூவரையும் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
தான் ஒரு மருந்துவப் பொருட்களின் விற்பனை முகவர் என்பதால் மிக எளிதாக மூவருக்கும் நஞ்சூட்டியுள்ளார்.
நஞ்சூட்டிய பின்னர் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ற எண்ணத்தில் தாயினதும் சகோதரியினதும் தங்கநகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது