siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

'மெரினா' படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு

 Friday, 14 September 2012, By.Rajah.'மெரினா' படத்தை பிறமொழிகளில் வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் இயக்குநர் பாண்டியராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மெரினா படம் வெளியான போது அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர். பாலமுருகன் என்பவர் பாண்டிராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரசம் ஆகியிருந்தார். இந்நிலையில் இப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை வெளியிட...

'சிங்கம்-2' படத்தில் ரகுமான் மனைவியாக நடிக்கும் ரித்திகா ஸ்ரீநிவாஸ்

By.Rajah.கொலிவுட்டில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்து பரபரப்பான நடிகையானார் ரித்திகா ஸ்ரீநிவாஸ். தன் நடிப்பு திறமைக்கு சரியான வாய்ப்பை கொலிவுட் தரும் என்று இவர் காத்திருக்கிறார். பரபரப்பாக பேசப்பட்ட 'வழக்கு எண் 18/9' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்ற இவர், கொலிவுட்டில் ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சிங்கம் -2' படம், கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கும் படம்...

பிபாஷா பாசுக்கு வைரஸ் காய்ச்சல்

By.Rajah.பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளதால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றார். பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடித்த ராஸ் 3 படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்புகிறது. இப்படத்தில் பிபாஷாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிபாஷா பாசு. தனது உடலை முழுவதும் பரிசோதித்த பின்பு, சிகிச்சையும்...

இலங்கையில் இரண்டரை வருடங்களுள் 9412 பேர் தற்கொலை! ஆண்களே அதிகம்

    By.Rajah.இலங்கையில் பல காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வோரின் தொகை அதிகரித்துச் செல்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்அறிக்கையின்படி தற்கொலைகள் தொடர்பான விபரம் வருமாறு: 2010ஆம் ஆண்டு, ஆண்கள் 2914 பேரும் பெண்கள் 950 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2011 இல் ஆண்கள்- 2939, பெண்கள்-831, 2012 இல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் ஆண்கள்-1381பேர், பெண்கள்- 397 பேரும் தற்கொலை...

போரின் போது தமிழர்களிடம் திருடிய தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தும் சிங்களவர்கள்!

    By.Rajah.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படையினரால் திருடப்பட்ட தமிழர்களின் பெருமளவு தங்கம் இப்பொழுது இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தங்கக் கடத்தல் என்பது பொதுவாக துபாய் அல்லது சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரை பிடிபட்டிருக்கும் 29 தங்கக் கடத்தல் சம்பவங்களில் 22 சம்பவங்கள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த...

இஸ்லாத்தை அவமதித்த அமெரிக்கத் திரைப்பட சர்ச்சை: யேமனிலும் தூதரகம் மீது தாக்குதல்

By,Rajah.இஸ்லாம் மதத்தை அவமதித்தாகக் கூறப்படும் அமெரிக்கத் திரைப்படத்துக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கரத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் யேமனில் உள்ள அமெரிக்கத் தூதுவராலம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 5 யேமன் நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிரிய படையினருக்கும் இடையே பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது. ...

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் திருட்டு

  By.Rajah. யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிகிச்சைக்காக விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களது பணமே இவ்வாறு திருடப்பட்டதாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நோயாளி ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் இன்னொரு பெண்ணிடம் திருமண மோதிரம் மற்றும் சங்கிலி என்பனவும் இன்னொரு பெண்ணிடம் 1100 ரூபா...

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் விபத்தில் மூவர் படுகாயம்

  By.Rajah.யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகக்காட்டுப்பாட்டை இழந்து ரொலிக்கொம் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று மாலை 4.45 மணியளவில் வேலணை வங்களாவடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப்...

அவுஸ்திரேலியா செல்லவிருந்த 20 பேர் கோமாரியில் கைது

By.Rajah. அவுஸ்திரேலியா செல்லவிருந்த 20 பேர் பொத்துவில் பொலிஸாரால் கோமாரியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுள் மூன்று சிங்களவர்களும் 17 முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை பொத்துவில் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  ...

சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் காட்டுக்குள் வசிக்கும் முள்ளிக்குளம் மக்கள்

By.Rajah. தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளம் கிராமத்துக்கு சற்றுத் தொலைவில் உள்ள மலங்காடு காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வரும் முள்ளிக்குளம் பகுதி மக்கள், தாம் மீளக் குடியமர்த்தும் வரை காட்டுக்குள் வாழப்போவதாகத்  தெரிவித்தனர். முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சென்றனர். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இவர்கள் தமது கிராமத்தில்...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம்: த.தே.கூ.

BRajah. முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்குச் சொந்தமான 500 ஏக்கர் வயல் காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர் முக் கியஸ்தர்கள் தம்மிடம் முறைப்பாடு செய் து ள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமை ப் பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் சிவசக்தி...

தமிழ் அன்பு கவிதை கள்

அம்மா பேசினால் கோபங்களை சாதிக்கும் நான் நீ திட்டும்போதெல்லாம் வெட்கமின்றி ... உன்பின்னால் வருகிறேன் <மனம் வலிக்கும் நேரங்களில் உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும். ஆனால் இன்றோ என் மனவலிக்கு முழுமுதற் காரணமும் நீயாய்/div> ...

இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர்களுக்குப் புகலிடம் கிடையாது: சுவிஸ்ஸில் புதிய சட்டம்

By.Rajah.புகலிடம்நாடி வருவோரில் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிவந்தவருக்கு இடமில்லை என்று இந்த மாத இறுதிக்குள் சுவிஸ் நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை இயற்றத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடத்திய வாக்கெடுப்பில் 25 பேருக்கு 20 பேர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்திற்கு வந்த அகதிகளில் பெருங்கூட்டத்தினர் எரித்ரேயா நாட்டிலிருந்து தப்பி வந்த இராணுவத்தினரேயாவர். சுவிஸ் செய்தி நிறுவனம், இராணுவத்தில்...

புகைபிடிக்கும் கூடங்களை அகற்ற வேண்டாம்: தேசிய வாக்கெடுப்பில் முடிவு

By.Rajah.சுவிட்சர்லாந்தில் மதுபானக்கூடம் அலுவலகம், மனமகிழ் மன்றம், உணவு விடுதி போன்ற இடங்களில் புகைபிடிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள கூடங்களை நீக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவிடங்களில் புகைக்கும் பழக்கம் இரண்டாம் கட்ட புகைபிடித்தலுக்கு உதவும் வகையில் இருப்பதால் இப்பழக்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற பொதுமக்கள் எடுத்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 23ம் திகதி இதற்கான பொதுவாக்கெடுப்பு நடக்க...

மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் காகங்கள்: ஆய்வில் புதிய தகவல்

By.Rajah.மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்வதும், அவர்களுடன் பழகி அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியும் காகங்களுக்கு உண்டு என்று புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில், அணிலின் மூளையைப் போன்றே காகங்களின் மூளையின் அமைப்பும் அமைந்துள்ளது கண்டறியப்பட்டது. காகங்களுடன், மனிதர்கள் சிலரை ஒன்றாக பழக வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஒன்றாக பழகியவர்களைப் போன்று மற்றொருவர்...

இரட்டை கோபுரத்தை தகர்த்தவர்களின் பேச்சு அடங்கிய வீடியோ வெளியீடு

By.Rajah.இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான, விமானத்தை கடத்திய இருவரின் பேச்சு அடங்கிய வீடியோவை அல்கொய்தா தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி நான்கு விமானங்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகள், உலக வர்த்தக மையமாக செயல்பட்ட இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்களை மோதச் செய்ததில் 3 ஆயிரம் பேர் இறந்தனர். இந்த துக்க நிகழ்ச்சியின் 12ம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது....

எகிப்தின் முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை

By.Ralah.எகிப்து நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது நஜீபுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எகிப்தின் பிரதமராக இருந்தவர் அகமது நஜீப். அந்த கால கட்டத்தில் வர்த்தக நடவடிக்கை ஒன்றில் சட்டத்துக்குப் புறம்பான விதத்தில் பலன் அடைந்ததாக, நஜீப் மீது கடந்தாண்டு குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரியில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விசாரணை...