siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 10 அக்டோபர், 2012

கனடாவிலிருந்த நாடுகடத்தப்பட்ட தமிழர் 4ம் மாடி சித்திரவதை கூடத்தில்...

.
புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012.By.Rajah.
சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி கடும் துன்பம் அனுபவிக்கிறார். இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இதைக் கனடா அரசு நன்கு அறிந்தும் மேற்கூறிய அகதியை அவருடைய விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறலாகும். ஜனநாயக நாடென்று தன்னைக் கூறிக்கொள்ளும் கனடாவுக்கு இது பொருத்தமானதல்ல.
ஐநா நிறைவேற்றிய அகதிகள் பாதுகாப்புச் சட்டம் எந்த நாட்டை விட்டுத் தப்பியோடி ஒருவர் அகதி அந்தஸ்துக் கோருகிறாரோ அவரை அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பக் கூடாது என்று சொல்கிறது. இந்த விதியைக் கனடா மீறியுள்ளது.
இலங்கையில் நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்தாலும் சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போதல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் விசாரணையின்றித் தண்டிக்கப்படாமல் நீடிக்கின்றன.என்று தெரிவிக்கப்படுகிறது.
கனடா அரசு இனியாவது தவறை உணர்ந்து நாடுகடத்தப்பட்டு 4ம் மாடியில் சித்திரவதை அனுபவிக்கும் ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்குரிய நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற

     
.Wednesday10 October2012 ,By.Rajah.இலங்கை அகதிகள் 60 பேர் இந்தியாவில் கைதுபடகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, இராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் ‌தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தினார். தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19, சிறுவர்கள் 7, சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர்.
இதில் அகதிகள் குழுவை‌ சேர்ந்த ஐந்து பேர் பொலிஸ் விசாரணையில் தப்பிச் சென்றது தெரிய வந்ததுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தியர்களை கிண்டலடிக்கும்

          
Wednesday 10 October 2012 .By.Rajah.  திரைப்படங்களுக்கு சிங்கப்பூரில் தடை
இந்தியர்களின் உணர்வை பாதிக்கச்செய்யும் விதத்தில் அமைந்த திரைப்படத்தை வெளியிட, சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

சிங்கப்பூரில் சமீபத்தில், "செக்ஸ், வயலன்ஸ், பேமிலி வேல்யூ' என்ற நகைச்சுவைப்படம், "போர்ன் மசாலா, தி பவுன்சர்' ஆகிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இத்திரைப்படங்கள், இன சண்டையை தூண்டும் விதத்திலும், இந்தியர்களை கிண்டலடிக்கும் விதத்திலும் இருந்தன.
இந்திய நடிகர் ஒருவரும், சீன வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் நடிகரும் இப்படங்களில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படங்களை பார்த்த, சிங்கப்பூர் திரைப்பட தணிக்கை குழுவினர், சர்ச்சைக்குரிய வகையில் இந்த படங்கள் உள்ளதால், இவற்றை திரையிட அனுமதி மறுத்தனர். இப்படங்கள், வெளியாக மூன்று நாட்கள் இருந்த நிலையில், இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

பிரான்ஸ், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு

         
Wednesday 10 October 2012  .By.Rajah.இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான மருத்துவ விருது, ஜப்பான் மற்றும் பிரிட்டன் நிபுணர்களுக்கு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான விருது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளித்துகள் மற்றும் அயனிகள் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை பாராட்டி, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்தில் "சூப்பர் கம்ப்யூட்டர்' பயன்பாட்டிற்கு பெரிய அளவில் உதவி புரியும், என கூறப்படுகிறது

பகைமையை முடிவுக்கு கொண்டுவர சிறுமிகளுக்கு திருமணம்.

.          
Wednesday 10 October 2012  .By.Rajah.
பஞ்சாயத்து கூறிய பாகிஸ்தாபாகிஸ்தானில், இருபிரிவினரிடையே,நிலவிவந்தபூசலை தீர்ப்பதற்கு, 13 சிறுமிகளை, திருமணம் செய்விக்க தீர்ப்புக் கூறிய, எம்.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் தேரா பக்டி என்ற ஊர் உள்ளது. இங்கு இரு பிரிவினரிடையே பகைமை நிலவி வந்தது. சமீபத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்தில், தாரிக் மசூரி என்ற எம்.பி., கலந்து கொண்டார். "இருதரப்புக்கும் இடையே, பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்றால், 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இரு தரப்பை சேர்ந்த, இளைஞர்கள் திருமணம் முடிக்க வேண்டும்' என, மசூரி தலைமையிலான, பஞ்சாயத்தில் தீர்ப்புக் கூறப்பட்டது.

சிறுவர்கள் திருமணத்தை, ஆதரிக்கும் விதத்தில், தீர்ப்புக் கூறிய, எம்.பி., மசூரியின் செயலை கண்டித்த, நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், இது தொடர்பாக, அவருக்கு "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சர்ச்சைக்குரிய இந்த பஞ்சாயத்தில், தான் கலந்து கொள்ளவில்லை என, மசூரி தெரிவித்துள்ளார்