
பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்ப உள்ளதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று, குர்ஹாம் சாக்கீயும் அவரது ரஸ்ய காதலி விக்டோரியாவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான குர்ஹாம் சாக்கீ கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய...