siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தகவல்கள் புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

வெற்றி பெற்றவர்களுக்கு குழந்தைகள் பரிசாக வழங்கப்படும் வினோதம்!!


பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், வெற்றி பெற்றவர்களுக்கு குழந்தைகள் பரிசாக வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான ஹூசைன், அமான் ரம்ஜான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மதம் தொடர்பான கேள்விகள், விவாதங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு, இதுவரை மொபைல் போன், வாகனங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது குழந்தைகள் பரிசாக வழங்கப்படுகிறது.
விவாத நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகப்படுத்தும் முயற்சியாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், கைவிடப்பட்ட குழந்தைகளை, குழந்தையற்ற தம்பதிகளுக்கு பரிசளிப்பதில் தவறில்லை என்கிறார் ஹூசைன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் குழந்தையை பரிசாக பெற்ற ஆயிஷா ரியாஸ் என்ற பெண், இந்த நிகழ்ச்சி தன்னை ஒரு தாயாக முழுமைப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 3 குழந்தைகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆதரவற்ற குழந்தைகள் அமைப்பு ஒன்றுடன்இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது {(வீடியோ,புகைப்படங்கள், இணைப்பு})






 

திங்கள், 29 ஜூலை, 2013

தொடர்ச்சியாக 12 குண்டுகள் வெடித்தது: 47 பேர் உடல் சிதறி ?

 

ஈராக்கில் தொடர்ச்சியாக 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 47க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஷியா பிரிவு மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன.
தொடர்ந்து வெடித்த 12 கார் குண்டுகளால், 47 பேர் உடல் சிதறி பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
இக்கொடூர தொடர் கார்குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.{புகைப்படங்கள்}


 

புதன், 27 பிப்ரவரி, 2013

சீனாவின் வடிவமைப்பில் புதிய டைட்டானிக்,,,


அவுஸ்திரேலியா பணக்காரரின் செலவில் உருவாக உள்ள டைட்டானிக் கப்பலை சீனாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்று வடிவமைக்கிறது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் கிளைவ் பால்மர், டைட்டானிக் கப்பலை உருவாக்குவதாக அறிவித்திருந்தார்.
நேற்று நியூயார்க்கில் உள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், டைட்டானிக்கை கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது, 2016ம் ஆண்டில் முடிவடைந்து கப்பல் பயணத்தை தொடங்குமென கூறினார். இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுத்ஹெம்டன் பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும். இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912ம் ஆண்டில் இருந்த பழைய பாணி உடைகளை அணிவார்கள்.அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும் என்பது கூடுதல் தகவல்கள் ஆகும்.{புகைப்படங்கள்,}


செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்தமைக்கான தடயங்கள்

கிழக்கில் ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்த தடயங்கள், சான்றுகள் மற்றும் கல்வெட்டுக்கள தற்போதும் காணப்பட்டு வருகின்றன. இவை ஒருபுறமிருக்க தற்போது கிழக்கின் பல பாகங்களுக்கும் தெற்கிலுள்ள குழு ஒன்று இரகசியமான முறையில் ஆதிகால தடயங்களை கண்டு கொள்வதற்காக தேடுதல் வேட்டை ஒன்றில் இறங்கியுள்ளது. அதற்கு தமிழினத்தின் சிலரும் உறுதுணையாக அமைகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். தழிழர்கள் வாழ்ந்து வந்த பாரிம்பரிய பண்டைய இடங்களில் ஆதிவாசிகளான தமது பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதனை ஆதாரம் காட்டி பின்னர் அவ்விடங்களை பொது இடமாக பிரகடனப்படுத்தி அதனை அரசுடமையாக்கி பின்னர் பெரும்பான்மை இனமக்களை குடியேற்றுவதே இதன்நோக்கமாகும் என இப்பகுதி பழம்பெரும் தமிழ் மூதாதையர்களும் ஆய்வாளர்களும் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள உன்னிச்சை, வெல்லாவெளி, பட்டிப்பளை.வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களில் இந்நடவடிக்கைகளை அவதானிக்க முடிகின்றது. இவற்றுள் சில இடங்களை இலங்கை இராணுவத்தினரே இவ்வாறு அடையாளம் காட்டிக் கொடுக்கிள்றார்கள் என்பதும் புலனாகின்றது {புகைப்படங்கள்]

புதன், 23 ஜனவரி, 2013

விண்வெளியில் இருந்து நேரடியாக உரையாடிய Chris Hadfield

டொரண்டோவில் தனது பெயரில் இயங்கும் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர்களுடன் நேரடியாக உரையாடினார் Chris Hadfield என்னும் விண்வெளி வீரர். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.தனது பெயரில் டொரண்டோ அருகில் இயங்கும் Chris Hadfield Public School மாணவர்களுடன் நேரடியாக விண்வெளியில் இருந்து உரையாடும் சம்பவம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார் Chris Hadfield.பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகன்ற திரையில் திடீரன Chris Hadfield உருவம் தெரிந்து, அவர் பேச ஆரம்பித்தவுடன் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளித்தார் விண்வெளி வீரர்ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வகுப்புக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரிடம் வரிசையாக தங்களுடைய வானவியல் சந்தேகங்களை குறித்த கேள்விகளை கேட்டனர்ஆறாம் கிரேடு படிக்கு ஒரு மாணவி "புவியீர்ப்பு இல்லாத விண்வெளியில் உடல் எடையை அதிகரிக்காதவாறு இருக்க எவ்வகை முயற்சிகளை செய்தீர்கள்" என்ற கேள்விக்கு பதிலளித்த விண்வெளி வீரர், "தினமும் இரண்டு மணிநேரம் கடுமையான உடற்பயிற்சி செய்து, உடல் எடை சீராக வைத்திருக்கிறேன்" என்று கூறினார். மேலும் விண்வெளியில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்றும் மேல்பகுதி எது? கீழ்பகுதி எது? என்றே தெரியாமல் மிதந்து கொண்டிருப்பதால், இரத்த ஓட்டம் சீராக இருப்பது.{புகைப்படங்கள்}
தடைபடுகிறது என்றும் அதற்காக சிறப்பு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

புதன், 2 ஜனவரி, 2013

புத்தாண்டு கொண்புகைப்படங்கள்,டாட்டத்தில் போதையில்


நடுரோட்டில்விழுந்தகிடந்தஇளம்பெண்கள்இங்கிலாந்தில் புதுவருட கொண்டாட்டத்தின் போது ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் குடிபோதையில் நடுரோட்டில் போதை தெளியாமல், சுயநினைவு இன்றி விழுந்து கிடந்ததாக காவல்துறை உயரதிகாரி Superintendent James Tozer என்பவர் வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வன்முறை எதுவும் நிகழாவண்ணம் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது.



 

புதுவருடம் பிறந்தவுடன் நள்ளிரவு 12 மணிமுதல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் துவங்கியவுடன், இளம் ஆண்களும் பெண்களும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை குடிக்கத் தொடங்கினர். மதுபோதையில் அறைகுறை ஆடையுடன் நடு ரோட்டில் அவர்கள் செய்த அட்டகாசத்தை பொறுக்க முடியாத போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பொறுமையுடன் ஈடுபட்டனர்.



புத்தாண்டு தினம் என்பதால் அவர்களை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு, வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரவர் வீடுபோய் சேர இங்கிலாந்து போலீஸார் உதவி செய்தது மிகவும் போற்றுதலுக்குரியது என அந்த அதிகாரி தன்னுடைய டுவிட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

74 வயது இங்கிலாந்து தந்தைக்கு ஏழாவது குழந்தை

.           
 
(6வது மகன் Paul உடன் 72 வயது மைக் அமிடேஜ் ஜோடி){புகைப்படங்கள்,}
இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(2007 ஆம் ஆண்டு திருமணத்தின் போது 3வது மனைவி லிண்ட்சேவுடன் மைக் அமிடேஜ்)
32 வயது இளம் மனைவி பெற்றெடுத்தார்.அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தனக்கு 7வது குழந்தை பிறக்கப் போவதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிடேஜ்.
இந்த வயதில் தந்தையாகப் போகிறோமே என்று அமிடேஜ் வெட்கமெல்லாம் படவில்லை. மாறாக படா குஷியாக காணப்படுகிறார். இன்னும் பல குழந்தைகளை லின்ட்சே மூலம் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கண் சிமிட்டிப் புன்னகையுடன் கூறுகிறார். பலர் என்னிடம் இந்த வயதில் ஏன் இப்படி என்று கேட்கிறார்கள். அவர்களது கேள்வியே தவறு. நான் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் இப்போது இளமையாக உணர்கிறேன் என்றார் அமிடேஜ்.
இவர் சுர்ரேயைச் சேர்ந்தவர் 1961ம் ஆண்டு முதல் முறையாக இவர் தந்தையானார். இவரது மூத்த மகன் கிளன் அப்போதுதான் பிறந்தார். அப்போது அமிடேஜுக்கு 21 வயதுதான். அப்பெல்லாம் பிள்ளை பெத்துக்கிறது ரொம்பக் கஷ்டமானதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே எனது மனைவி லின்ட்சே மூலம் நிறைய குழந்தைகளுக்கு பிளான் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார் அமிடேஜ்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

வங்கியில் கொள்ளையடித்த மிட்ரோம்னியால் பரபரப்பு


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மிட்ரோம்னி வங்கியில் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வெல்ஸ் பர்ஸோ வங்கியின் கிளை உள்ளது.
இந்த வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் இவர் புளோரிடா மாகாண கொடியை போன்ற சட்டையும், மிட்ரோம்னி போன்று முகமூடியும் அணிந்திருந்தார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்[புகைப்படங்கள்].






திங்கள், 17 டிசம்பர், 2012

லண்டன் நர்ஸ் உடல் இந்தியாவில் அடக்கம்

 
 
கண்ணீருடன் விடைகொடுத்த கணவர் மற்றும் குழந்தைகள். (படங்களுடன்) ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 

 
 


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 7 பேர் பலியாயினர், 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெஷாவரில் உள்ள விமான நிலையம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து பயங்கர மோதல் நடைபெற்றது. இச்சம்‌பவத்தில் தாக்குதல் நடத்திய ஐந்து பேர் பலியாயினர் என கைபர் மாகாணத்தை சேர்ந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இப்திகார் ஹூசைன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதல் ராக்கெட் குண்டு விமான ஓடுதளத்திலும் மற்றொன்று வெளிப்பகுதியிலும் வெடித்தது என கூறினார்.
மேலும் காயமடைந்தவர்கள் விமான நிலையம் அருகே உள்ள கைபர் டீச்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நி‌லமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து விமான நிலைம் பாகிஸ்தானின் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது{புகைப்படங்கள், }.






செவ்வாய், 11 டிசம்பர், 2012

யூடியூப்புக்கு பதிலாக ஈரானில் புதிய இணையத்தளம் தொடக்கம்

இணையத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகள் பரப்புவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளிவருவதாக ஈரான் அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.
இதனையடுத்து யூடியூப் உட்பட பல்வேறு இணையத்தளங்களை ஈரான் அரசு தடை செய்துள்ளது. இதனால் மக்கள் தகவல்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் www.mehr.ir என்ற பெயரில் புது இணையத்தளத்தை ஈரான் அரசு தொடங்கி உள்ளது.
இதில் ஈரானியர்களுக்கு தேவையான தகவல்கள், இஸ்லாமிய கலாசாரம், கலைஞர்கள் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையத்தை தொடர்ந்து கண்காணித்து வருவோம், சென்சார் செய்வோம் என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.