siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

எமது இலட்சியத்தை அடைய அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, இன்றைய நிலையில் எமது இலட்சியம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த, எங்களை நாங்களே ஆளக்கூடிய, காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சியே ஆகும். அந்தச் சுயாட்சியை நாம் அடைய வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என த. தே. கூட்டமைப்பு வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார். மட்டக்களப்பு, பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டூர், 14ஆம் கொலணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

எரிபொருள் நிரப்ப பயணிகளிடம் பணம் வசூலித்த ஏர் பிரான்ஸ் நிறுவனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் நாட்டு விமான நிறுவனம் பயணிகளிடம் பணம் வசூலித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்தை நோக்கி, ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த 15ஆம் திகதி இரவு புறப்பட்டது. விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால், இந்த விமானம் அவசரமாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் தரையிறங்கியது. சிரியா மீது பிரான்ஸ் நாடு பொருளாதார...

சீன மாணவி உலக அழகியாக தெரிவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,சீனாவைச் சேர்ந்த மாணவி வெண் சியா யு(வயது 23 ) உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் உலக அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன அழகி வெண் சியா யு தெரிவு பெற்றார். பலவண்ண விளக்குகள் மின்னிய அரங்கில் கடந்தாண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை சிங்கள கடற்படை அரிவாள் வெட்டு! வலைகள் நாசம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர். இராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது: வெள்ளப்பள்ளத்தில் இருந்து சுமார் 60 பைபர் கிளாஸ் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சதீவு அருகே அவர்களை வழிமறித்த சிங்கள கடற்படையினர் அரிவாளால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்....

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் உள்ள மகிழவெட்டுவான் ஆற்றில் நேற்று சனிக்கிழமை நீராடிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகிழவெட்டுவான், கல்குடாப் பகுதியைச் சேர்ந்த (வயது 36) தம்பாப்பிள்ளை கிருபைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். மேசன் தொழில் செய்யும் இவர் நேற்று சனிக்கிழமை மகிழவெட்டுவான் பொதுமயானத்தில் கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு அருகிலிருந்த ஆற்றில் நீராடியபோதே இவ்வாறு உயிரிழந்தார்....

தமன்னா மீது வழக்கு தொடர இந்தி தயாரிப்பாளர் முடிவு

19.08.2012.நடிகை தமன்னா தன்னிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்று இந்தி தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். நடிகை தமன்னா 9 ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொண்ட ஒப்பந்தம் அவருக்கு இப்போது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சலிம் அக்தர் என்ற இந்தி தயாரிப்பாளர் தன் படமான “சாந்து ஷா ரோஷன் செஹ்ரா” என்ற படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்தார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக 2005- 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் ஊதியத்திலிருந்து...

தமிழீழம் என்ற சொல்லடங்கிய அரசியல்கட்சிகளுக்கு இலங்கையில் விரைவில் தடை

19.08.2012. பிரிவினையைத் தூண்டும் வகையில் “தமிழீழம்” என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து இலங்கை தேர்தல் ஆணையாளர் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழில் ஈழம் என்பது இலங்கையை குறிக்கும் அதேவேளை, தமிழீழம் என்பது பிரிவினையை அர்த்தப்படுத்துவதாகவும், இதனால் தமிழீழம் என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது....

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்

19.08.2012. வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார். கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய...