அமெரிக்கா மெக்சிககோவில் உள்ள அனாஹீவாக் என்ற நகரில் ஆள் இல்லாத தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி 16 பேர் பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மெக்சிகோ போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை
மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இந்த் விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.