siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 27 செப்டம்பர், 2012

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வரும்

 27.09.2012.By.Rajah.இந்துக்களுக்கு வசதி ஏற்படுத்துங்கள்; நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் கடற்படையிடம் கோரிக்கை நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் குறித்த நேரங்களில் இடம்பெறும் பூசைகளுக்குச் செல்ல பிரத்தியேக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் ஏ.தியாகராஜா புங்குடுதீவு கடற்படை தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு...

உலக தமிழர்கள் கிளிநொச்சியில் நடந்த மனதை உருக்கும் சம்பவங்களை பாருங்கள்!

         27.09.2012.ByRajah.பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி நகரில் நடத்தியிருந்த போராட்டம் வெற்கறிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்று காலை 11மணியளவில் மாவட்டச் செயலகத்தின் முன்பாக கூடிய...

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: 10 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் அபாயம்

27.09.2012.By.Rajah.உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ஆம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும்...

நவீன மயமாக்கப்படும் மருத்துவப் பதிவேடுகள்

27.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் கடந்த சில வருடங்களாக மருத்துவத் துறையில் "பதிவேடுகள், நோயாளி விபரங்கள், மருந்துச் சீட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன்" போன்றவை அனைத்தும் காகித வடிவத்திலிருந்து நவீனமயமாக்கப்பட்டு கணனி வடிவத்தில் இருப்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகின்றது. கணனி பதிவுகள் மலிவானவை, குழப்பமற்றவை, நிரந்தரமானவை என்பதால் விபரங்களை CD க்களில் பாதுகாக்கப் பலரும் விரும்புகின்றனர். நோயாளியின் நோய் விபரம், அதற்காக நடைபெற்ற பரிசோதனை...

சாட்டை (வீடியோ இணைப்பு)

27.09.2012.By.Rajah.தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை. நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, இதனால்...

ஒக்ரோபர் 12ல் திரைக்கு வரும் மாற்றான்

27.09.2012.By.Rajah..சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த 'மாற்றான்', ஒக்ரோபர் 12ம் திகதி திரைக்கு வருகின்றது. ஐரோப்பியா, ரஷ்யா நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள மாற்றானின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் இயக்குனர் கே.வி முடித்து விட்டார். ஒரு சில மாற்றங்களுடன் க்ளைமேக்ஸ்...

கந்தகோட்டை பட இயக்குனரின் அடுத்த படம் “ஈகோ”

27.09.2012.By.Rajah.நகுல், பூர்ணா, சந்தானம் நடித்த கந்தகோட்டை படத்தை இயக்கிய சக்திவேல் “ஈகோ” என்னும் பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வேலு என்னும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் அமெரிக்காவில் பொறியியல் படித்தவர். நாயகியாக அனஸ்வரா நடிக்கிறார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் புகழ் பெற்ற பாலா கொமெடி வேடத்தில் நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் சக்திவேல் கூறுகையில், அழகான பொய்கள் மற்றும்...

நடிகை மீது நடன இயக்குனர் பரபரப்பு புகார்

27.09.2012.By.Rajah.கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடனம் ஆட மறுத்து, தகராறு செய்தார் என்று நடிகை ஆண்டிரிட்டா ராய் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடன இயக்குனர். கன்னடத்தில் உருவாகும் படம் ரஜினி காந்தா. இப்படத்தில் துன்யா விஜய் நாயகனாகவும், ஆண்டிரிட்டா ராய் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர் மீது நடன இயக்குனர் இம்ரான் சர்தார்யா புகார் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, நயன்தாரா, திவ்யா, பிரியாமணி, ராதிகா பண்டிட், பாவனா என பல கதாநாயகிகளுடன்...

சத்யராஜ் மகள் ஆவணப் படத்தில் அறிமுகம்

27.09.2912.Byx.Rajah.சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதன்முறையாக ஆவணப் படமொன்றில் நடித்துள்ளார். சத்யராஜின் மூத்த மகன் சிபிராஜ், ஏற்கனவே லீ, நாணயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் சிபிராஜின் படங்கள் இன்னும் வரவேற்பை பெற வில்லை. இந்நிலையில் சத்ய ராஜின் மகள் திவ்யா முதன்முறையாக ஆவணப்படமொன்றில் அறிமுகமாகி நடித்துள்ளார். இப்படத்தைப் பார்த்த சிபிராஜ், திவ்யாவின் நடிப்பை பாராட்டினாராம்....

பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் வேண்டாம்; அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை

27.09.2012.By.Rajah.எதிர்வரும் 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு, ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மனுஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட எட்டுக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மனு அனுப்பி...

பரீட்சை நிலையம் இடமாற்றம்

27.09.2012.By.Rajah.இலங்கை வங்கியாளர் சங்கத்தினால் யாழ். திருக்குடும்ப கன்னிய மடப் பாடசாலையில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எவ். டி.பி.எவ். ஆகிய பரீட்சைகள் வரும் சனி, ஞாயிறு மற்றும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி ஆகிய நாள்களில் நடைபெற ஏற்பாடாகியிருந்தன. இந்தப் பரீட்சைகள் குறித்த தினங்களில் யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

கேப்பாபிலவு மக்களை கவனிப்பார் யாருமில்லை அவலவாழ்வு தொடர்கிறது

27.09.2012.By.Rajah.சொந்த இடத்தில் மீள் குடியமர்வு எனக் கூறி நேற்றுமுன்தினம் நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் படையினரால் இறக்கிவிடப்பட்ட கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தொடர்ந்தும் அங்கு பெருந்துன்பங்களை அனுபவிப்பதுடன் உதவிகள் எதுவுமின்றி அல்லல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் இல்லாமையால் இந்தக் குடும்பங்கள் அந்தரித்த நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. நேற்றுமுன்தினம் படையினரால்...

மாற்றங்கள் ஏற்படாவிட்டால் விளைவுகள் கடுமையாகும் இலங்கையை எச்சரிக்கிறது கனடா

27.09.2012.By.Rajah.எங்கும் இராணுவ பிரசன்னமாகவே உள்ளது. நாட்டின் வடபகுதியில் நாம் பார்த்தோம், கிழக்கிலும் பெரும் பகுதிகளில் அதுவே உண்மையாக உள்ளது. மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் எனக் கூறும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய இராணுவப் பிரசன்னம் நியாயப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மாற்றத்தை இலங்கை வெளிப்படுத்த வில்லையென்றால் கடுமையான விளைவுகளை அது சந்திக்க வேண்டிவரும். இவ்வாறு இலங்கையில் நிலைமைகளை கண்டறியும் கனேடிய அரசின் உத்தியோகபூர்வக் குழுவில்...