பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூ டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 154 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து
தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள தத்தா ஹெல் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தியது
இந்த அதிரடி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு வஜிரிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான்
ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,200–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.