siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 29 மே, 2019

அவசர அறிவிப்பு Whats-app பயனாளர்களுக்கு

hatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு, ஊடுருவல்காரர்கள் கண்காணிப்பு மென்பொருளைப் பொருத்தியதை WhatsApp 
உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனீட்டாளர்களே குறிவைக்கப்பட்டனர் என்றும், அந்த ஊடுருவல் நடவடிக்கை மிகவும் திறமையாகக் கையாளப்பட்டது என்றும் WhatsApp
 அறிவிததுள்ளது.
ஊடுருவல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, WhatsApp செயலியின் ஒரு குறைபாடு சரிசெய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செயலியை update அதாவது புதுப்பித்துக்கொள்ளுமாறு நேற்று WhatsApp அதன் ஒன்றரை பில்லியன் பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது.
உலகச்செய்திகள் 14.05.2019
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 comments:

கருத்துரையிடுக