siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 31 மார்ச், 2015

தலைமையகம் மீது வாகனத்தை மோத முயற்சி மர்ம நபர் சுட்டுக்கொலை !!!

அமெரிக்காவில் மேரிலேண்டில் போர்ட் மியாடே என்ற இடத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகம் உள்ளது. நேற்று தலைமையக நுழைவாயில் கதவு மீது மோதும் வகையில், ஒரு வாகனம் வேகமாக வந்தது. அப்போது, பணியில் இருந்த பாதுகாவலர்கள், அந்த வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில்,
 வாகனத்தில் இருந்த ஒரு மர்ம நபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



சனி, 28 மார்ச், 2015

நீராட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 10 பேர் மரணம்!!!

வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியில் புனித நீராட்டத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.   30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசம் தலைநகர் டாக்காவிற்கு வெளியே, அஷ்டமி தினமான இன்று பிரம்மபுத்திரா நதியில் பக்தர்கள் புனித நீராடினர். அப்போது கூட்டம் அதிகமானதால் குறுகிய இரண்டு பாதையின் வழியாக ஆற்றுக்குள் செல்ல பக்தர்கள் முயற்சித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இச்சம்பவத்தில் 7 பெண்கள் 
உள்பட 10 பேர்
 சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். லாங்காபாத் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதியில் அஷ்டமியில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கமானது ஒன்று. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மக்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





புதன், 25 மார்ச், 2015

நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர்

கார் விபத்தில் பலியான சினிமா நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்
ப்ரைன் ஓ கார்னர்’ என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ ’பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்ற பவுல் வாக்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பலியாகி பல ரசிகர்களை ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தினார். 
அவரது சக நடிகரும், உயிர் நண்பருமான ’வின் டீசல்’ பவுலின் மரணத்திற்கு பல மேடைகளில் அஞ்சலி செலுத்தி இருந்தாலும், விரைவில் திரைக்கு வர இருக்கும் ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ திரைப்பட வரிசையின் 7 வது பாகமான ’ப்யூரியஸ் 7’ திரையிடல் விழாவில் தன் மகளுக்கு ’பவுலின்’ என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்து, தன் ஆருயிர் நண்பன் பவுலுக்கு தனது நினைவுகளால் அஞ்சலி செலுத்தினார். 
விழாவில் பேசிய அவர் “வேறு யாரையும் ஒரே கருவில் பிறந்தவர்களைப் போல் நான் நினைத்ததில்லை. ஆனால் பவுல்... அவன் ஒரு அற்புதமான ஆன்மா... அவனுடைய நினைவை சுமந்து கொண்டிருப்பது, என் நினைவின், என் வாழ்வின் ஒரு பகுதி. திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது. ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என் 
சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன் “ என்று சொன்னபடி, உணர்ச்சிவசப்பட்டு மேடையில் ஸ்தம்பித்து நின்ற வின் டீசலை ரசிகர்கள் ஆசுவாசப்படுத்தினர். 
பொதுவாகவே தனது அந்தரங்க விஷயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத வின் டீசல் கடந்த மார்ச் 16-ம் தேதி தனக்கும் தனது நீண்ட நாள் பெண் தோழி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்தார். இவர்களுக்கு ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 மார்ச், 2015

உலக தண்ணீர் தினம் இன்று மார்ச்.22.திகதி

ஜக்கிய நாடுகள் சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி  உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்.
கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறை களாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாச டைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப் பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப் பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரி யாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள் ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி யது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்.
நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்உலக தண்ணீர் தினம் இன்று மார்ச்.22.திகதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 மார்ச், 2015

இரு குழுவினருக்கு இடையே துப்பாக்கி சூடு 2 பேர் பலி!!!

சுவீடன் நாட்டில் நேற்று இரவு ஒரு பப்புக்குள் நடந்த தகராறில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.சுவீடன் நாட்டின் 2 வது மிகப்பெரிய நகரான கோட்டிபோர்க் நகரில் உள்ள வார் கோர்க் ஒச் பப்பில் நேற்று  இரண்டு 
குழுவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இதில் நடந்த  துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவததிற்கு தீவிரவாதததிற்கும் சம்பந்தம் இல்லை.என சுவீடன் போலீஸ் செய்தி தொடர்பாளர்
 தெரிவித்து உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>>

செவ்வாய், 17 மார்ச், 2015

துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகள் கைது!!!

மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு
 விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.
அன்வர் இப்ராகிம், ஓரின சேர்க்கை வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 16 மார்ச், 2015

தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல்!!!

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தின. ஈராக்கின் அல்ஆசாத், அல் ஹவாஜா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், போர்க்கருவிகள், வாகனங்கள் சேதமடைந்தன.
இதேபோல், சிரியாவில், துருக்கியின் 
எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன.
இந்த தகவலை அமெரிக்க கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 மார்ச், 2015

சிறையில் அதிபருக்கு எதிராக போராடியவர் தற்கொலை!!!

வெனிசுலாவைச் சேர்ந்தவர் ரொடால்போ கான்ஜலெஸ் (வயது 64). விமானியான இவர், அரசுக்கு எதிராகவும், அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராகவும் மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கான்ஜலெஸ்சை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் திடீரென சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அந்நாட்டு உள்துறை மந்திரி கஸ்டவோ கான்ஜலெஸ் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக மாநில அரசு வக்கீல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கான்ஜலெஸ்சை ஏற்கனவே இருந்த
 சிறையில் இருந்து, அதிக வன்முறை சம்பவம் நிகழும், போதைப்பழக்கம் உள்ள பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைக்கு மாற்ற இருந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கான்ஜலெஸ்சின் மகள் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அரசு மறுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 9 மார்ச், 2015

பயணத்தை தொடங்கியது சூரியசக்தியால் இயங்கும் விமானம்

சூரியசக்தியால் இயங்கும் 'இம்பல்ஸ் 2' விமானம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. விமானம் அடுத்து உலகம் முழுவதும் சுற்றி வருகிறது.அடுத்த 5 மாதங்களுக்கு விமானம் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்கிறது. விமானம் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களை கடக்கிறது. ஒருவிமானி மட்டும் இருந்து ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள விமானத்தின் கட்டுப்பாட்டை, ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் கொண்டிருந்தார். சுவிஸ் நாட்டின் பெர்னார்ட் பிக்கார்டை
 தொடர்ந்து ஆண்ட்ரே போர்ஷ்பெக்கும், சூரியசக்தியால் இயங்கும் விமானத்தில் விமானியாக பணியாற்ற உள்ளார். இந்த விமானம் உலகின் பல்வேறு  பகுதிகளில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மற்றும் ஓய்வு காரணமாக விமானம் தரையிறக்கப்பட உள்ளது. தொழில்நுட்பம் தொடர்பாக  விமானம் பிரசாரமும் மேற்கொள்ள உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் பி.பி.சி. செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நாங்கள் மிகவும் சிறப்பான விமானத்தை கொண்டுள்ளோம் என்று நம்புகிறோம், விமானம் எங்களை பெரிய கடல்கள் முழுவதும் சுற்றிவரும் திறன் கொண்டுள்ளது. நாங்கள் 5 நாட்கள் இதில் தொடர்ச்சியாக பயணம் செய்யலாம். இது மிகவும் சவாலானது. சீனா சென்று காலுன்றுவதற்கு பயிற்சி மற்றும் தயாராக எங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் உள்ளது. என்று கூறினார். 
எரிபொருள் இல்லாமல் முழுக்க முழுக்க சூரியசக்தியால் மட்டுமே இயங்கும் 'இம்பல்ஸ் 2' என்ற சோலார் விமானத்தை பெர்னார்ட் பிக்கார்டு, ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இரண்டு பைலட்டுகள் வடிவமைத்துள்ளனர். உலகிலேயே முதன்முறையாக  ஸ்விட்சர்லாந்து நாட்டில் வெற்றிகரமாக விமானத்தின் சோதனை ஓட்டம் 
கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் மேற்கே உள்ள பாயிரைன் மிலிட்டரி ஏர்போர்ட்டில் இருந்து பறக்க துவங்கிய இந்த விமானம் இரண்டு மணி நேரம், 17 நிமிடங்கள் வரை பறந்து 2400 அடி உயரம் வரை சென்றது.
சூரியசக்தி விமானத்துக்கு எரிபொருள் தேவையில்லை. காற்றை மாசுபடுத்தும் புகையை வெளியிடாது. இரவிலும், பகலிலும் பறக்கும் திறனுடையது. சுமார் 72 மீட்டர் அகலம் கொண்ட இந்த விமானத்தின் இறக்கை ஒரு பெரிய ஜம்போ விமானத்தின் இறக்கையை விட பெரியது. மற்ற விமானங்களை காட்டிலும் மிகக்குறைந்த எடை கொண்ட இந்த விமானத்தின் எடை வெறும் 2.3 டன் மட்டுமே. எரிபொருளுக்கு மாற்றாக சூரியசக்தியில் இயங்கும் இந்த விமானத்தில் 17  ஆயிரத்திற்கும்
 மேற்பட்ட சோலார் பேட்டரிகள் உள்ளன. இந்த சோலார் பேட்டரிகள் கிரகித்துக் கொள்ளும் சூரியசக்தியே விமானத்திற்கு பறக்கும் உந்துசக்தியை  கொடுக்கிறது. விமானம் முதற்கட்டமாக, இந்தியா, சீனா, பசிபிக் கடல், அமெரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேலே பறக்க திட்டமிட்டுள்ளது. 
இந்த விமானம் பயணிகள் விமானத்திற்கு மாற்று அல்ல என்றும், ஆனால், மனிதர்கள் இயற்கை தரும் சக்திகளை பயன்படுத்தி இதுபோலவும் செய்ய முடியும்  என்று எடுத்துக்காட்டுவதற்கே இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விமானிகள் ஏற்கனவே தெரித்து இருந்தனர்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 மார்ச், 2015

போர் விமானம் விழுந்து நொறுங்கி 2 விமானிகள் பலி

 துருக்கியில் போர் விமானம் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த இரு விமானிகள் உயிரிழந்தனர். இரண்டே வாரங்களில் அந்த நாட்டில் இதுபோல் இரண்டாவதாக 
நடைபெறும் விபத்து இதுவாகும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 மார்ச், 2015

யானைக்கு முதல் முறையாக செயற்கை கால் பொருத்தப்பட்டது !

  உலகிலேயே முதல் முறையாக தாய்லாந்தில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெண் யானை சராசரி பணிகளை வழக்கம்போல் செய்து பார்வையாளர்களை அசத்தி வருகிறது. கம்போடியா எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் புதைத்து வைக்கப்படிருந்த கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை பறி கொடுத்த மோஷா என்ற அந்த பெண் யானைக்கு தாய்லாந்தில் உள்ள ஆசியா யானைகள் மருத்துவமனயில் கடந்த 2007-ம் ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்ற யானைகளைப் போல் இல்லாமல் மூன்று கால்களுடன் ஊனமாகி விட்டதை எண்ணி கண்ணீர் வடித்த மோஷா, பல நாட்கள் சாப்பிட மறுத்து சோர்ந்து போய் காணப்பட்டது. பிளாஸ்டிக், மரத்தூள் மற்றும் உலோகங்கள் சேர்ந்த கலவையால் மனிதர்களுக்கு பொருத்தும் செயற்கை கால்களைப் போலவே மோஷாவுக்கும் ஒரு செயற்கை காலை
 டாக்டர்கள் தயாரித்தனர்.
தற்போது, அந்த காலின் உதவியுடன் தனது வழக்கமான பணிகளை உற்சாகமாக செய்யும் மோஷாவை கவனித்து வரும் பாகன், அது தூங்கும்போது மட்டும் செயற்கை காலை கழற்றி வைத்து விடுகிறார். புதிய கால் கிடைத்தவுடன் புதிய வாழ்க்கையே 
கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இப்போதெல்லாம் சுமார் 150 கிலோ உணவு வகைகளை சாப்பிடுகின்றது. சமீபத்தில் பழைய செயற்கை காலுக்கு பதிலாக புதிதாக மற்றொரு செயற்கை காலை பொருத்திக் கொண்ட மோஷா, இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் நடமாடி வருவதாக பாகன் கூறுகிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>