siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 23 மே, 2013

ராணுவ வீரர் தலை துண்டித்துக் கொலை

 .
 
லண்டனில், பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.பரபரப்பான லண்டன் சாலையில், ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்த இரண்டு மர்ம மனிதர்கள், அவரது தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தனர். அப்போது, இஸ்லாமிய மொழியில் அவர்கள் கத்தியதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்க எழுத்தாளருக்கு மேன் புக்கர் பரிசு

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸýக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச் சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸýக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. ""தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி'' மற்றும் ""வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்'' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது.
 தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.
 ஆண்டுதோறும் வழங்கப்படும் புக்கர் பரிசுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படும் சர்வதேச விருதானது அவரைக் கெüரவிப்பதாக அமையும். 
இத்தகைய விருது பெறுவோர் ஆங்கிலத்தில் நாவல் எழுதியிருக்க வேண்டும். அல்லது பிற மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் சர் கிறிஸ்டோபர் ரிக்ஸ் கூறினார்.
 லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டார் அனந்த மூர்த்தி.
ஒரு நாளைக்கு நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் தனது 80 வயதையும் பொருட்படுத்தாது இவ்விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் சார்பிலும் இந்த விழாவில் தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டார் அனந்தமூர்த்தி.

பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல்?

பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அருகே புதன்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர் ராணுவ வீரர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் ஆயுதங்களுடன் வந்ததாக ராணுவ அதிகாரி சைமன் லட்ச்ஃபோர்டு தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற லண்டனின் தென்கிழக்கில் உள்ள வூல்விச் சாலையை போலீஸார் அடைத்தனர். ராணுவ பயிற்சி முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடந்ததுள்ளது.

இத்தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்று செய்திகள் வெளியானாலும், இது குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.