siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 மே, 2013

அமெரிக்க எழுத்தாளருக்கு மேன் புக்கர் பரிசு

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸýக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச் சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸýக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. ""தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி'' மற்றும் ""வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்'' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது.
 தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.
 ஆண்டுதோறும் வழங்கப்படும் புக்கர் பரிசுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படும் சர்வதேச விருதானது அவரைக் கெüரவிப்பதாக அமையும். 
இத்தகைய விருது பெறுவோர் ஆங்கிலத்தில் நாவல் எழுதியிருக்க வேண்டும். அல்லது பிற மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் சர் கிறிஸ்டோபர் ரிக்ஸ் கூறினார்.
 லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டார் அனந்த மூர்த்தி.
ஒரு நாளைக்கு நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் தனது 80 வயதையும் பொருட்படுத்தாது இவ்விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் சார்பிலும் இந்த விழாவில் தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டார் அனந்தமூர்த்தி.

0 comments:

கருத்துரையிடுக