siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 19 செப்டம்பர், 2012

சினிமா நடிகர் பெரிய கருப்புத் தேவர் மரணம்

 Wednesday, 19 September 2012, By.Rajah.தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பர் 18) காலமானார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இருந்த இவர், சுமார் 1,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். தாலாட்டு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கரகாட்டக்காரன், பூ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெற்றிமாறன்...

வல்வெட்டித்துறை இளைஞர் யஹரவப்பொத்தானைக்கு கடத்தல்; சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் நேற்றுத் தகவல்

19.09.2012.By.Rajah.   பெரும்பான்மை இனத்தவர்களால் வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு ஹெரவப் பொத்தானை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறான கடத்தல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் அ.அனந்தராஜ் தெரிவித்தார். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில்...

காரைநகர் கசூரினா கடற்கரையில் கலாசார சீரழிவைத் தடுக்கக் கோரிக்கை

19.09.2012.By.Rajah.காரைநகர் கசூரினா கடற்கரையில் தொடரும் கலாசார சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கசூரினா கடற்கரையில் கட்டு மீறிச் செல்லும் கலாசார சீரழிவுகளைக் கட்டுப்படுத்துவதுடன் அந்தப் பகுதியில்...

இந்தியக் குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்கள்; அகதி முகாமில் நீண்ட நாள்கள் இருப்போர்

19.09.2012.By.Rajah. இந்திய அரசு எங்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அகில இந்தியத்  தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுடில்லியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் அகில இந்தியத் தமிழ் அமைப்புகள் நடத்திய மாநாட்டில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்...

சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

< 19.09.2012.By.Rajah.செல்போன் வராத காலத்துல, லேன்ட் லைன் போன்ல, காதலிக்கு போன் பண்ணும் போது அவ அப்பாவோ , அம்மாவோ போன் எடுக்கும் போது வரும் ஒரு டெரர் பீலிங் இருக்கு பாருங்க ..... ஹ்ம்ம் இந்த காலத்துல அதெல்லாம் சாத்தியம் இல்லை ...

தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹன்சிகா

19.09.2012.By.Rajah.இஷ்க் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஹன்சிகா நடிக்கிறார். கொலிவுட்டில் தற்போது வேட்டை மன்னன், வாலு, சிங்கம் 2 என பெரிய நடிகர், இயக்குனர்களின் கைகளில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்ஸிகா. இதற்கிடையில் பிரபல நடிகை ஜெயப்பிரதா ஒரு தமிழ்ப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அவரது உறவினர் சித்தார்த் நாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற இஷ்க் என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்...

ஸ்ரேயாவை திக்குமுக்காட வைத்த ஜப்பானிய ரசிகர்கள்

Wednesday, 19 September 2012, By.Rajah.சிவாஜி 3டி பிரிமியர் காட்சியை காண டோக்கியோ சென்றிருந்த ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திக்குமுக்காட வைத்தனர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்த சிவாஜி படம் 2007ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. ரூ.68 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.128 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. சிவாஜி படத்தை தற்போது 3டியில் உருவாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட உள்ளது. 3டி...

பிரபல தெலுங்கு நடிகை திடீரென மயங்கியதால் படப்பிடிப்பு இரத்து

 Wednesday, 19 September 2012, By.Rajah.பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார், ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற படம் மூலம் கொலிவுட்டிற்கு நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இவர் கழுகு நாயகன் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் நடித்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர்...

கணனியின் செயற்திறனை அதிகரிப்பத​ற்கு: Wise Disk Cleaner

புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, By.Rajah.தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன. இதனால் வன்றட்டில் அநாவசியமான முறையில் மேலதிக இடம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் வேகம் குறைவடைவதனால் ஒட்டுமொத்தமாக கணனியின் செயற்திறனும் குறைவடைகின்றது. எனவே இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும் பயனற்ற, தற்காலிக கோப்புக்களை சிறந்த முறையில் தேடி அவற்றை நீக்குவதற்கான வசதியை Wise Disk...

கனடாவில் வீட்டு விற்பனை சரிவு

19.09.2012.By.Rajah.கனடாவில் வீடுகளின் விலை உயரவில்லை என்றாலும், விற்பனை சரிந்து விட்டதாக கனடாவின் வீட்டுமனைக் கழகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டு விற்பனை குறைந்து கொண்டே வந்து, தற்போது 8.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு வான்கூவர், டொரொண்டோ, கேல்கரி, எட்மண்ட்டன் மற்றும் ஒட்டாவாவின் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு தான் காரணமாகும். மாத அடிப்படையில் ஆராய்ந்தால் யூலை மாதத்தில் மட்டும் 5.8 சதவிகிதம் குறைந்து விட்டது....

மெக்சிகோ சிறையிலிருந்து 132 கைதிகள் அமெரிக்காவிற்கு தப்பி ஓட்டம்

 புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, By.Rajah.மெக்சிகோ சிறையில் இருந்து 132 கைதிகள் சுரங்கம் தோண்டித் அதன் வழியாக சிறையிலிருந்து தப்பியோடி உள்ளனர். அவர்கள் அண்டை நாடான அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மெக்சிகோ-அமெரிக்க எல்லையை ஒட்டிய நகரம் பீட்ராஸ் நெக்ராஸ். இங்குள்ள சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை சிறை வார்டன் வழக்கமான சோதனை மேற்கொண்ட போது 132 கைதிகள் இல்லாதது...

விசாரிக்க சென்ற இரு பெண் பொலிசார் படுகொலை

19.09.2012.By.Rajah.கொலை குறித்து விசாரிக்க சென்ற லண்டனை சேர்ந்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு பெண் ‌பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கி கொண்ட செல்லவில்லை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றும், அதுவே கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனவும்...

சுறாவால் உயிர் தப்பிய பொலிசார்

19.09.2012.By.Rajah.பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று வழி தவறி 15 வாரங்கள் கடலிலேயே தத்தளித்த பிரிட்டன் பொலிஸ்காரர், சுறா மீன் உதவியால் கரை திரும்பியதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி டோவ்காய் டெய்டோ 42, தன் உறவினர் லெலு பைலலி உடன், பசிபிக் பெருங்கடலில் கில்பர்ட் எலிஸ் தீவில் உள்ள தரவா பகுதிக்கு, படகில் மீன் பிடிக்கச் சென்றார். மெயினா தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் எரிபொருள் தீர்ந்து விட்டது....

சுவிஸ் தொடர்வண்டித் தொழில் நுட்பத்தை அறிய இணையத்தளத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

19.09.2012.jah.சுவிட்சர்லாந்தின் தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான விஞ்ஞானிகளின் படைப்புத் திறனை அறிந்துக் கொள்ள அமெரிக்காவிலும், சுவிட்சர்லாந்திலும் இருப்பவர்கள் இணையத்தளத்தின் மூலமாக அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஸ்கைப் மூலமாக இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது. கடந்த 1870 ல் சுவிஸ் விஞ்ஞானியான அனட்டோலே மேலெட் என்பவர் கண்டுபிடித்த தொடர்வண்டி எந்திரத்தை இப்போது சீசர் மேயா என்ற பொறியாளர் இயக்கினார். இந்த மேலெட் எந்திரம்...

மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு)

19.09.2012.By.Rajah.சுவிஸ் விஞ்ஞானிகள் ஒரு எலியின் மூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின் வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும் என்கின்றனர். இப்பணியை நிறைவேற்றாவிட்டால் மனித மூளையின் நரம்பிணைப்புகளின் வரைபடத்தில் ஒவ்வொரு நரம்பிணைப்பின் இருப்பிடத்தைக் குறித்து அறிய நாற்பது ஐம்பதாண்டுகள் ஆகலாம் என்று லாசேனில் உள்ள புளு ப்ரெயின் ஆய்வுத்திட்டத்தின் தலைவரான ஹென்றி மர்க்ராம்...

காசநோய் எதிர்ப்புக்கு புதிய மருந்து

19.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில், காசநோய் எதிர்ப்புக்கு மண்ணில் கிடைக்கும் நுண்ணுயிரி சரியான மருந்தாக அமைகிறது என்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். பைரிடோமைசின் என்ற இயற்கையான நுண்ணுயிரி, காசநோயை உருவாக்கும் மைகோ பேக்ட்டீரியம் ட்யுபர்குளோசிஸ் என்ற நுண்ணுயிரியை அழித்துவிடுகிறது. இதனால் இந்த பைரிடோமைசினை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று ஐரோப்பிய பத்திரிக்கை ஒன்றில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இக்கருத்தை லாசோன்சாவில்...