This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 19 ஜூன், 2013
தனக்குத் தானே ஆபரேஷன் செய்துக் கொண்ட முதல் டாக்டர்-
சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மதுபோதையில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட நான்கு பேரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ரி. சரவணராஜா ஒருவருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாவும் மற்றறொருவருக்கு மூவாயிரம் ரூபாவும் அடுத்த இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை கஞ்சா வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மற்றும் கண்டி தர்மசிறி மாவத்தையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்களிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றம்
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை.
இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டடு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)