siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 19 ஜூன், 2013

சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில்



அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மதுபோதையில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட நான்கு பேரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ரி. சரவணராஜா ஒருவருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாவும் மற்றறொருவருக்கு மூவாயிரம் ரூபாவும் அடுத்த இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை கஞ்சா வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மற்றும் கண்டி தர்மசிறி மாவத்தையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக