siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 29 நவம்பர், 2016

நியூயோர்க் மற்றும் லண்டன் நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்தில்!

உலகின் பிரபலமான நகரமாக கருதப்படும் லண்டன் மற்றும் நியூயோர்க் எதிர்வரும் சில வருடங்களில் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அன்டார்டிகாவில் உள்ள Pine island glacier தற்போது சேதமடைய ஆரம்பித்துள்ளதாகவும் அது வெகு விரைவில் உருகிடும் எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதற்கமைய லண்டன் மற்றும் நியூயோர்க் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மேல் கடல் நீர் அதிகரிப்பதனால், குறித்த நகரங்கள் இரண்டும் கடலில் மூழ்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது மாத்திரமின்றி இலங்கை உட்பட உலகின் கடல் மட்டத்தில் குறைவான நிலையில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் அன்டார்டிகாவில் 225 சதுர மைல் பனிப்பாறைகள் கரைந்துள்ளதாக ஒஹியோ அரச பல்கலைக்கழக தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையில் glacier கரைதல் வேகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 18 நவம்பர், 2016

அதிரடி சோதனையில் 12-வயது பெண் மற்றும் 6வாலிபர்கள் மீது குற்றச்சாட்டு!

கனடா-ரொறொன்ரோவின் வடபகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற  அதிரடி துப்பாக்கி சோதனையில் ஆறு இளவயதினர் மற்றும் 12-வயது பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. பொலிசாரின் அதிரடி 
சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 111 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
 ரொறொன்ரோ பொலிசார் பிறப்பித்த ஒரு தேடுதல் ஆணையுடன் விஞ்ச் அவெனியு கிழக்கு பகுதியில் விக்டோரியா பார்க்கில் அமைந்துள்ள வீடொன்றில் செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. 12-வயதுடைய பெண் ஒருவர் மீது ஒன்பது துப்பாக்கிகள் குற்றச்சாட்டுக்கள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் வைத்திருந்தமை
 குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ரொறொன்ரோவை சேர்ந்த 16-வயது பெண் மீது 19-ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களும் குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்கள் பறிமுதல் செய்த
 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் இரு 17-வயது வாலிபர்கள் 39-வயதுடைய பெண் ஒருவர் இரண்டு 16வயது பையன்கள் ஆகியோர் மீதும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. 18-வயதிற்குட்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 10 நவம்பர், 2016

கனடா யாழ் இளைஞர்-யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பைப் கொடுக்க தயார்.!

கனேடிய வெளிவிவகார அமைச்சின் ஐவாத் குரேசி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகளைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று(11) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
குறித்த குழுவினர் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஐயம் மேற்கொண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருவதற்குக் கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறினார்.
மேலும், இச்சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் கனேடிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்திச் செயற் திட்டங்கள் மற்றும் யாழ் மாவட்டத்தின் தற்போதைய தேவைப்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 நவம்பர், 2016

மது பாவனையில் தென் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் !

தென் ஆசிய நாடுகளில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களின் தலா மது பாவனை 3.03 லீற்றர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில் அதிகளவில் மது அருந்துவோர் வரிசையில் பெலரஸ் பிரஜைகள் முதலிடம் பெற்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியா 2ஆம் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் மது பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை 115ஆம்
 இடத்திலுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 4 நவம்பர், 2016

கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமியை காப்பாற்றிய இளம் பெண்!

ரஷ்யாவில் 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராத விதாமாக ஆழ்துளை கிணற்றில் விழந்துள்ளது. இதை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சிடைந்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் 
தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை காப்பாற்றுவதற்காக அருகில் பள்ளம் தோண்டி காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை.
இதன் காரணமாக தீயணைப்பு படையினர் அருகில் இருந்த 17 வயது சிறுமியை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
அதன் பின் முதன் முறையாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி இறக்கப்பட்ட சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் காரணமாக, மேலே கொண்டு வரப்பட்டார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அச்சிறுமி உள்ளே இறக்கப்பட்டார்.
ஆனால் இம்முறை அச்சிறுமி, ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவித்த 2 வயது குழந்தையை மேலே தூக்கி கொண்டுவந்து மீட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அடங்கிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>