siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

காசா- இஸ்ரேல் இடையே ரகசிய சுரங்கப்பாதை


 
காசாவிலிருந்து இஸ்ரேல் வரைவுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேலிய இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் நுழைவு வாயில் இஸ்ரேல்- காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் உள்ளது.

ஹமாஸ் பிரிவினர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும், இதில் ஏதேனும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
இதன் எதிரொலியாக காசாவிற்கு செல்லவிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரகசிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்த இராணுவத்தினரை பிரதமர் பெஞ்சமின் நேதன்ஞாஹு பாராட்டியுள்ளார்.

ஆயினும், ரகசிய சுரங்கத்தை ஹமாஸ் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டு ராணுவத் தகவல் அதிகாரியான அபு ஒபைடா மறுத்துள்ளார்.

மேலும் இதேபோன்று ஆயிரக்கணக்கான சுரங்கங்களை இஸ்ரேல் இராணுவத்தினர் தோண்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சுரங்கப்பாதை வழியே கடந்த 2006 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்ணுக்கு கத்திக்குத்து கனடாவில்


 டொரண்டோவை சேர்ந்த பெண்ணை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
கனடாவின் வடமேற்கு டொரண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை 5.30 மணிக்கு அவரச அழைப்பு வந்ததை தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

அப்போது, பெண் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார், ஆனால் மற்ற அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்ததுடன், ஏதேனும் உள் பிரச்னையின் காரணமாக இது நடந்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பில் ஏதும் தெரிந்தால் தங்களை அணுகும்படி தெரிவித்துள்ளனர்.