siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 30 செப்டம்பர், 2015

அதிகரிக்கும் அகதிகள் வரவால் திணறும் ஜேர்மனி

அதிக எண்ணிக்கையில் அகதிகள் ஜேர்மனி நோக்கி வருவதால் போதுமான குடியிருப்பு வசதிகளை அகதிகளுக்கு வழங்குவதில் ஜேர்மனி அரசு திணறி வருகின்றது.
ஜேர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிப்பதன் முக்கிய காரணமாக கருதப்படுவது, படுக்கை வசதி, உணவு மற்றும் உறவிடம்.

ஆனால் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு போதிய குடியிருப்பு வசதிகளை வழங்கவே அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியின் பல பகுதிகளில் அகதிகள் நெருக்கடியான சூழலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அதுவே பொதுமக்கள் புழக்கத்திற்கு ஏற்றவகையில் இல்லை எனவும் குற்றச்சட்டுகள் எழுந்துள்ளன.

அகதிகளாக வந்துள்ள மக்களை இதுபோன்ற சூழலில் தங்க வைப்பது அவர்களின் சுகாதார நிலையை நெடுங்காலம் பாதிப்புக்கு உள்ளாக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Kassal மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அகதிகள் முகாமில் பொலிசாருக்கும் அகதிகளுக்குமிடையே நடந்த மோதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 1000 பேர் அனுமதிக்கப்பட வேண்டிய பகுதியில் 1500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறை உணவுக்காகவும், குளிக்கவும், காலைக்கடன்களை முடிக்கவும் இதுபோன்ற வெகுஜன முகாம்களில் அகதிகள் பெரும்பாடு படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜேர்மனியின் 14 மாகாணங்களில் வெகுஜன குடியிருப்புக்கு தேவையான வசதிகள் எதுவும் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள்,

விலங்கு பாதுகாப்பு சட்டங்களில் குறிப்பிட்டுள்ள அளவு இருப்பிட வசதிகள் கூட அகதிகளுக்கு ஜேர்மனி அரசு வழங்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



செவ்வாய், 29 செப்டம்பர், 2015

உணவகத்தில் இருமாதங்களில் இரண்டாவது தடவையும் கொள்ளை!

ரொறன்ரோ Fairbank அருகிலுள்ள ஷவர்மா உணவகத்தில் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது தடவையாக கொள்ளையிடப்பட்டுள்ளது.கஸ்டில்பீல்ட் அவனியூ அருகில், 2488 டவ்றின் வீதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணியளவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு மிரட்டிய போதிலும் பணம் பெறப்பட்டதாக என்பது தொடர்பில் விபரங்கள் தெரியவரவில்லை.சந்தேகநபர் 25 வயது மதிக்கத்தக்க கறுப்பு மனிதர் எனவும் சம்பவத்தின் போது முகத்தை மறைத்து முகமூடி 
அணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த உணவகத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 25 செப்டம்பர், 2015

மசூதியில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் 25 பேர் உயிரிழப்பு

பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஏமனில் சண்டை

அரபு நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த மார்ச் மாதம் சவுதிக்கு ஓட்டம் பிடித்தார். அதிபர் ஆதரவு படையினரை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர்.

இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அடுத்தடுத்து தாக்குதல்

இந்த நிலையில், தலைநகர் சனாவில் போலீஸ் பயிற்சி கல்லூரி அருகில் அமைந்துள்ள பாலிலி மசூதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்திருந்த நபர், அவற்றை வெடிக்கச்செய்தார். குண்டுவெடித்தபோது மக்கள் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் எடுத்தனர். அதைத் தொடர்ந்து மசூதியின் நுழைவாயிலில் மற்றொருவரும் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தினார். அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்புகளால் மசூதி பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஆங்காங்கே மனித உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்தன.

25 பேர் உயிரிழப்பு

இந்த தாக்குதல்களில் 25 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அங்கிருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்க வில்லை.

ஐ.எஸ். தீவிரவாதிகள்?

இருப்பினும் கடந்த சிறிது காலமாக ஏமனில் ஷியா பிரிவினரை குறிவைத்து சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். ஷியா பிரிவினரை அவர்கள் எதிரிகளாக கருதுகின்றனர். எனவே ஷியா பிரிவினர் தொழுகை நடத்த வருகிற மசூதி என்பதால், ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தி இருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி இதே சனா நகரில், ஷியா பிரிவினரின் மசூதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 142 பேரை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது. 

கடந்த 6 மாதமாக சவுதியில் இருந்து வந்த அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த 22-ந் தேதி ஏடன் நகருக்கு திரும்பியுள்ள நிலையில் இப்போது சனாவில் ஷியா பிரிவினரின் மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

உயர்நீதிமன்ற ஜுரர் சபைக்கு இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நற்பெயருக்கு மகுடம் சூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல்
 தடவையாகும்.

சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத் தூதுக்குழு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

இத்தூதுக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை 
மேற்கொண்டிருந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 16 செப்டம்பர், 2015

ரயில் பேருந்துடன் மோதல் உயிர் தப்பிய சிறுவர்கள் (காணொளி இணைப்பு)

ஜேர்மனியின் Hamburg பகுதியில் பேருந்துடன் ரயில் மோதிக்கொண்டதில், பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Hamburg நகரின் புறநகர் பகுதியான Buxtehude அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து மீது விரைவு ரயில் ஒன்று மோதிக்கொண்டது.

ரயில் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்ற நோக்கில் பள்ளிச் சிறுவர்களுடன் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது.

இந்நிலையில், பேருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, ரயில் வருவதையொட்டி தானியங்கி தடுப்பு அந்த பேருந்தை நகரவிடாமல் தடுத்துள்ளது
.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xyouXMsOjcw" frameborder="0" allowfullscreen></iframe>

சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர், உடனடியாக பேருந்தில் இருந்த சிறுவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

இதனிடையே ரயில் ஓட்டுநருடன் தொடர்புகொள்ள எத்தனித்த பேருந்து ஓட்டுநருக்கு ஏமாற்றமே மிஞ்சியது,

மேலும் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் சிக்கிய ரயில் மீது மோதி அதன் முன் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றது.

இதில் ரயிலுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது, மேலும் ரயில் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்தனர்.

சமயோசிதமாக பேருந்து ஓட்டுநர் செயல்படவில்லை எனில் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 9 செப்டம்பர், 2015

இந்த சிறுமி அறிவுத் திறனில்சிறந்த சாதனை.

பிரிட்டனில் மென்சா அமைப்பு அண்மையில் நடத்திய அறிவுத்திறன் தேர்வில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவி லிடியா அதிகபட்ச அளவான 162 மதிப்பெண்களை பெற்றார்.

இயற்பியல் அறிஞர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங் ஆகியோர் முன்பு இத்தேர்வில் 160 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்போது அவர் களை விட கூடுதல் மதிப்பெண் களை லிடியா பெற்றுள்ளார்.

அறிவுக்கூர்மை உடைய வர்களை உறுப்பினர்களாக கொண்ட உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய சங்கமாக ‘மென்சா இன்டெர்நேஷனல்’ உள்ளது. உலகில் எவரும் இந்த அமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றிபெற்று இதன் உறுப்பினராக சேரலாம்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 செப்டம்பர், 2015

குழந்தை சடலம் கடல்கரையில் ஒதுங்கியது???

துருக்கி கடல்கரையில் 3 வயது சிறுவனது உடல் கரைஒதுங்கியது தொடர்பான புகைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களில் நெஞ்சை பிளக்கும் விதமாக உள்ளது. 
லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் 
அடைந்து 
வருகிறார்கள். சட்டவிரோதமாக படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக செல்லப்படுகிறது. இத்தகைய படகுகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு சம்பவமும் அரங்கேறிவருகிறது. இவ்வாறு 
விபத்துக்குள்ளாகி இந்த ஆண்டு மட்டும் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்று ஐ.நா. சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களும் அகதிகளாக ஐரோப்பிய யூனியனுக்கு செல்லும் சம்பவமும் அரங்கேறிவருகிறது. 
இதற்கிடையே அகதிகளின் ஆக்கிரமிப்பை  கட்டுப்படுத்த
 ஐரோப்பிய யூனியன் நடவடைக்கை எடுத்து வருகிறது. தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு அகதிகள் உள்ளே நுழைய தடையை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அகதிகள் நுழைவதற்கு ஐரோப்பிய 
யூனியன் தடைசெய்து வரும்நிலையில் லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் அகதிகள் அங்கு செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கடலில் அலையோடு 
அலையாக ஆடும் சூழ்நிலையும் உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மிகவும் கடுமையான சூழ்நிலையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. 
இவ்வாறு எங்கும் செல்ல முடியாத நிலையில் அவர்கள் உயிரை விடும் நிலையும் நிலவுகிறது. 
இந்நிலையில் துருக்கி நாட்டில் சுற்றுலா பகுதியில் உள்ள கடற்கரையில் 3 வயது சிறுவனின் சடலம் கரைஒதுங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படமானது வெளியாகி உலக முழுவதும் உள்ள மக்களின் நெஞ்சை பிளக்கும் விதமாகவும், கண்ணீரை வரச்செய்யும் விதமாக கொடூரமாக உள்ளது. துள்ளி குறுநடைபோடக்கூடிய பச்சிளம் பிஞ்சு, வாடிய முகத்துடன் சடலமாக 
கிடப்பதை வீரர் ஒருவர் தூக்கும் காட்சி வெளியாகிஉள்ளது.  உயிரிழந்த குழந்தையானது சிரியாவை சேர்ந்தது என்று தெரியவந்து உள்ளது. குழந்தை சிவப்பு நிற டீசர்ட் மற்றும் நீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து உள்ளது. மிகவும் அழகான அந்த பிஞ்சின் வாழ்க்கையை 
தண்ணீரே போய்விட்டது.
சிரியாவில் இருந்து கிரீஸ் நாட்டிக்கு பயணம் செய்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த படகில் இருந்த 12 பேர் உரிழந்தனர். 
படகில் இருந்த 3 வயது குழந்தையும் உயிரிழந்து, கரைஒதுங்கிஉள்ளது. குழந்தையின் பெயர் அய்லான் குர்தி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மனிதாபிமானம் 
துடைத்தெரியபட்டது
 என்றும் ஒருபுகைப்படம் உலகை அமைதியடைய செய்தது என்ற டேக்குடன் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையையும் திருப்பி உள்ளது. புகைப்படத்தை பார்த்து அழும் சமூக வலைதள பயனாளர்கள் தங்களது கருத்தை 
தெரிவித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>