siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஒன்லைனில் கணனி வைரஸ்களை ஸ்கான் செய்வதற்கு

 30.யூலை 2012,
கணனிகளில் தொற்றிக் கொண்டு தொல்லைகளைத் தரும் வைரஸ்களை இல்லாது ஒழிப்பதற்கு, கணனிகளில் நிறுவிப் பயன்படுத்தும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அதேபோல சில ஒன்லைன் வைரஸ் ஸ்கானர்களும் காணப்படுகின்றன.
அவற்றின் அடிப்படையில் தற்போது Avira வும், Cloud Protection எனும் முற்றிலும் இலவசமான தனது ஒன்லைன் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலும் இலகுவாகவும், வேகமாகவும் கணனிகளை ஸ்கான் செய்ய முடிவதுடன், புதிய அப்டேட்களின் பயன்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் கணனியில் இதனுடன் தொடர்பான அதிகளவு கோப்புக்களை சேமிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனினும் 1.5 MB கோப்பு அளவுடைய சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

உடல் எடை எளிதில் குறைய

 30. யூலை 2012,
ஐஸ் கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம். 1. எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைகிறது.
ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது இருக்கும். அதில் மேலும் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை அதிகரித்து, உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புகள் மற்றும் கலோரியை கரைத்து விடுகின்றது.
2. ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எது வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் உண்டப் பின் கண்டிப்பாக ஐஸ்கட்டிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் எடை எளிதாக குறையும்.
3. பசியைக் கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைகிறதோ, அதேப் போல் தான் ஐஸ் கட்டிகளும் அதில் ஒன்று. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை தான் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டாலும் கிடைக்கும்.
4. ஐஸ் கட்டியும் ஒரு பசியைத் தடுக்கும் பொருள். இதனால் உட்கொள்வதால் உடல் எடையானது விரைவில் குறையும்.
5. எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பசியானது அடங்கிவிடும். ஆகவே உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதனால் எடையும் குறையும்.
6. ஐஸ் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு குடிக்க வேண்டும். அது பற்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆனால் அப்படியே ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பற்கள் வலுவை இழக்கும். ஆகவே அதனை தண்ணீராகத் தான் குடிக்க வேண்டும்.
7. எப்போது எடை குறைந்தது போல் உணர்கிறீர்களோ, அப்போது அந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால், அது பற்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஐஸ் கட்டிகளை எந்த காரணம் கொண்டும் கடித்து சாப்பிட வேண்டாம். மேலும் ஐஸ் உடலில் இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.
ஆகவே எடை குறைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான்.

ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8














 30. யூலை2012.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.
அதனை மற்ற மதர்போர்டு உள்ள கணணிக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே உள்ள இயங்குதளங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டொலர் செலுத்திய பின்னர் உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், ஒக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.
முதல் முறையாக இரு வேறு வகை கணணி சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் இயங்குதளத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது.
டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டில் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும், யு.எஸ்.பி. 3 கிடைக்கும், விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்.
யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கணணி பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன

இரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி?

 29 யூலை 2012,
முறையான உணவு முறை இன்றி வாய்க்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை புற்றுநோய் உருவாகுகிறது. அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரைப்பை புற்றுநோய் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.
இரைப்பையில் புற்றுநோய் உருவாக ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமியும் காரணம். இது முதலில் இரைப்பையில் அல்சரை உருவாக்குகிறது.
அந்த அல்சரே, புற்றுநோய் எனும் அடுத்த கட்டத்தை அடைகிறது. புகைபிடித்தல், புகையிலை போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கும் இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் காரணமாக இரைப்பையின் உள்பக்க திசுக்களின் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும். நாளடைவில் இதுவே புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.
மதுப்பழக்கம் மற்றும் மசாலா கலந்த உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரைப்பையின் உள்பகுதியில் ஏற்ப டும் பாலிப்ஸ் என அழைக்கப்படும் சிறு சிறு கட்டிகளும் நாளடைவில் புற்றுநோய் கட்டிகளாக மாறலாம். பரம்பரைக் காரணங்களாலும் இந்நோய் ஏற்படலாம்.
இரைப்பையில் ஏற்படும் புற்றுநோய் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். முதல் கட்டமாக பசி குறைந்து எடை குறையும். அப்போதே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் பசியின்மை மற்றும் எடை குறைதலை மக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போகிறது. வெளிப்புற அறிகுறிகளை வைத்தே எந்த இடத்தில் புற்றுநோய் வந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.
உணவுக்குழாய் மற்றும் இரைப்பை சேரும் இடத்தில் புற்றுநோய் இருந்தால் உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் புற்றுநோய் எனில் அதன் பாதிப்பு இரைப்பையின் மேல் புறத்தில் வரும். சிறு குடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அப்பகுதி அடைபட்டு விடும்.
இதனால் சிறு குடலுக்குள் உணவைத் தள்ள இரைப்பை சிரமப்படும். அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு இருக்கும். பின்னர் வாந்தி ஏற்படும். சிலருக்கு இரைப்பை புற்றுநோய் எந்த அறிகுறியும் இன்றி வளர்ந்து பின்னர் கல்லீரல் அல்லது நுரையீரலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
இதன் அடுத்த கட்டமாக கல்லீரல் வீக்கம் இருக்கலாம். இது புற்றுநோயின் முற்றிய நிலை. கல்லீரலை அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து கண்டறியலாம். இரைப்பை புற்றுநோய் முற்றும் வரை விடாமல் ஆரம்ப அறிகுறிகளை முறையாக பரிசோதிப்பதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும்.
பாதுகாப்பு முறை: இரைப்பை புற்றுநோயை தவிர்க்க வயிற்றில் அல்சர் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம். டென்ஷன் குறைக்க யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட மனப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
அசைவம், மசாலா கலந்த உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவது நல்லது.
ஜீரணப் பிரச்னை, பசியின்மை மற்றும் எடை குறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் துவங்கும் போதே அதற்கான பரிசோதனைகள் செய்து புற்றுநோயா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்

கத்தி முனையில் 8 வயது சிறுமி மீது பாலியல் ரீதியான தாக்குதல்

 29 யூலை 2012,
8 வயது சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு, 6 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாலியல் வன்முறை தவிர பாலியல் துன்புறுத்தல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் பிரிவுகளிலும் இவன் மீது வழக்குத் தொடரப்பட்டது.
சம்பவ தினத்தன்று அதிகளவு மது அருந்தி விட்டு, கொகைன் என்ற போதைப் பொருளையும் எடுத்துக் கொண்டுள்ளான்.
இதனால் தான் செய்வது என்னவென்று தெரியாமல் இத்தகைய தவறை செய்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான்.
மேலும் தான் செய்த இந்த செயலுக்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்தான்.
அரசு வழக்கறிஞர் ஆண்டிரியா லேப்பிங் வாதிடுகையில், இவன் இரக்கமற்ற முறையில் கொடூரமாக நடந்திருக்கிறான். அந்தச் சிறுமியைப் பிடித்திழுத்துக் கொண்டு போய் கழிப்பறைக்குள் வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி முகத்தைக் கடித்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளான்.
சமூகத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இவ்வாறு மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட அவன், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே தான் செய்தான் என்று அவனுக்கு எதிராகக் கடுமையாக வாதாடினார்

வட மாகாணசபைத் தேர்தல் 2013 பெப்ரவரியில் நடத்த தீர்மானம்

 
 29 யூலை 2012,
வட மாகாணசபைக்கான தேர்தலை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாத இறுதியில் அதாவது 26 ம் திகதியளவில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ
முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பாதியில் நடைபெறவுள்ளதன் காரணமான முந்திக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கு முனைப்பு காட்டிவருகின்றது.
இதேவேளை வடமாகாணசபைத் தேர்தலின் முதலமைச்ர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அரசு தீர்மானித்திருந்த போதும், தற்போது இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்திருக்கும் அரசாங்கம், வட மாகாணத்தில் பிரபல்யம் பெற்ற புத்திஜீவி ஒருவரை தேர்தல் களத்தில் ஈடுபடுத்துவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போராசிரியர்கள் சிலரினதும் ஓய்வு பெற்ற கல்விமான்கள் சிலரினதும் பெயர்களும் இதற்காக பரீசீலிக்கப்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் 2000 பேர் வரை வாய்ப் புற்று நோயினால் பாதிப்பு!

 
 29 யூலை 2012,
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரக் கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது..
அத்துடன் நாளாந்தம் இருவர் வீதம் உயிரிழப்பதாகவும், குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஆண்களாகவே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
புகைத்தல், போதைப்பொருள் பாவனை, வெற்றிலைப் பாவனை போன்ற காரணங்களினாலேயே வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாய்ப்புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் நோயை முற்றாக குணப்படுத்த முடியும் என சுகாதார கல்விப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது

நல்லூர் உற்சவம் கொடியேற்றம் தொடங்கி இற்றைவரை 20 பவுண் தங்க

 
 29 யூலை 2012,
நல்லூர்க் கந்தன் கோவிலில் கொடியேற்ற நாள் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் 20 பவுன் நகைகள் வரை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதன் காரணமாக திருட்டுச் சம்வங்களும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கோவில் வளாகத்தில் பெண்களும், பக்தர்களின் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கோயிலில் தற்போது 600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் 150 பேர் கூடுதலாக அண்மையில் இணைக்கப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட படகு விபத்து: நடுக்கடலில் பயணிகள் தத்தளிப்பு

 
 29 யூலை 2012,
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்டு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து 300 மீற்றர் கடல் எல்லை தூரத்தில் இவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், படகில் சென்றவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு, இன்று அதிகாலை காலி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்கள் கடந்த 13ஆம் திகதி வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் பெண்கள் நால்வரும் சிறுவன் ஒருவரும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ். அரியாலையில் இனந்தெரியாதோரால் காந்தி சிலை உடைப்பு

 
 29 யூலை 2012,
யாழ். அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி குணசேகர தெரிவித்துள்ளார்.
 

பூகொட களனி ஆற்றில்300 பவுண் தங்கம் சேகரிப்பு

 _
29.07.2012.பூகொட களனி ஆற்றில் தங்கம் சேகரிக்க அனுமதிப் பத்திரம் வழங்கி இரண்டு மாதங் களில் சுமார் 300 பவுண் தங்கம் சேகரிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேகரிக்கப்பட்ட தங்கத்தில் 250 பவுண் பூகொட, கிரிந்திவெல்ல ஆகிய பகுதிகளி லுள்ள தங்க ஆபரணக் கடைகளுக்கு விற் பனை செய்யப்பட்டுள்ளது. ௭ஞ்சியவை வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது

பாஸ் நடைமுறையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு

_
29.07.2012.மன்னார் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருப்பதினால் தாம் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் அனைத்து மீன் பிடி துறைமுகங்களுக்கு அருகாமையிலும் கடற்படையினருடைய சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றன.

மீனவர்கள் குறித்த சோதனைச்சாவடிக்கு சென்று கடற்படையினரிடம் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களை சமர்ப்பித்தால் கடலுக்குள் செல்லுவதற்கான பாஸை வழங்குகின்றனர். அதனைக்கொண்டே கடலுக்குள் செல்ல வேண்டும்.

கடற்படையினர் சில நேரங்களில் கடலில் மீனவர்களிடம் சோதனைகளை மேற்கொள்ளும் போது பாஸ் இல்லாது விட்டால் கடுமையாகத்தாக்குவதாகவும் அச்சுறுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாஸ் நடைமுறையினால் உரிய நேரத்திற்கு தொழிலுக்குச் சென்று கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்தொழிலுக்கான புதிய பாஸைப் பெற்றுக்கொள்ளுவதற்கு மீனவர்கள் ஒவ்வெருவரும் நீண்ட நாட்கள் பாதுகாப்புத்தரப்பினரைத் தேடி அலைந்து திரிவதாகத் தெரிவிக்கின்றனர்.

விண்ணப்பப்படிவம் ஒன்றில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் கையொப்பத்தினை பெற்ற பின்னரே புதிய பாஸ் வழங்கப்படுகின்றது. ஆனால் கடற்படையினரிடம் இருந்து தற்போது பல இடங்களில் தொழிலுக்குச்செல்லும் மீனவர்களுக்கு புதிய பாஸ் இன்னும் வரவில்லை என்றும் இதனால் பல மாதக்கணக்காக தொழிலுக்குச்செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தமது குடும்பம் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

-மன்னார் சௌத்பார் பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்குக் கடற்படையினர் பாதுகாப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்ஸிம் மீனவர்கள் தொடர்ந்தும் பல பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

பல்கலைக்கு இவ்வருடம் மேலதிகமாக 3000 மாணவர்கள்

_
29.07.2012.பல்கலைக் கழகங்களுக்கு இவ்வருடம் மேலதிகமாக 3000 மாணவர்களை சேர்த்துக் கொள்வதென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவும், உயர்கல்வி அமைச்சும் தீர்மானித்துள்ளன.

இதன்படி 2011 உயர்தரப் பரீட்சையில் புதிய இஸட் புள்ளிகளின் படி 25,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவரென உயர் கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்

இலங்கைச் சிறையிலிருந்த 20 பாக். பிரஜைகள் விடுதலை

 _
29.07.2012.இலங்கைச் சிறைச்சாலைகளில் கைதிகளாக இருந்து வந்த பாகிஸ்தான் பிரஜைகள் 20 பேரை பாகிஸ்தான் அரசிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது.

இவர்கள் போதைக்கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்தார். இவர்கள் மீண்டும் இலங்கை வர முடியாதவாறு கறுப்புப் பட்டியலில் சேர்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மனதைஉருக்கும்ஓர் பாடல்

29.07.2012
இதை கேட்டால் கண்ணீர் வருமா உங்களுக்கு ..கேளுங்கள் தமிழர்களே

ஸ்ரீ நயினை நாகபூசணி அம்பாள் நிகழ்வு

29.07.2012
அலைகள்  தழுவும் நயினை நகபூசணி அம்பாள் சிறப்பு பார்வை 

சிவன்புதிய ஆலயம்

29.07.2012Shiv Chalisa
சூரிச் அருள்மிகு சிவனின் நிரந்தர ஆலயம் சம்பந்தமான நிகழ்வுகள்

வடிவலுவின் தமிழ் காமெடி நிகழ்சி

29.07.2012.வடிவலுவின் திறமை யான ஓர் நகச்சுவை விருந்து பார்த்து மகிழவும்

இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர்






29.07.2012
மண்டபம்: துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்று சங்கிலியால் கட்டிபோட்டு இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தியதாக ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் 23 பேரும் கண்ணீருடன் கூறினர்.ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தபோது, 3 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, 5 விசைப்படகுகளுடன் சிறைபிடித்தனர். அவர்களை இலங்கையில் உள்ள தலைமன்னார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதை கண்டித்து 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தது.இதனிடையே, மன்னார் நீதிமன்றம் நேற்று முன்தினம் 23 மீனவர்களை விடுவித்தது. சர்வதேச எல்லையில் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கப்பல் மூலம் மண்டபம் கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் (27ம் தேதி) இரவு 8 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் கடலிலேயே 15 மணி நேரம் காக்கவைத்தனர். நேற்று காலை 10 மணியளவில் கப்பலில் காத்திருந்த 23 மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.விடுதலையான மீனவர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த 21ம் தேதி இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த எங்களை இலங்கை கடற்படையினர் கத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டி சிறைப்பிடித்தனர்.

அவர்களுடன் வர மறுத்தால் சுட்டுக்கொன்றுவிடுவோம் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்த நாங்கள் வேறு வரூ.யின்றி அவர்களுடன் சென்றோம்.இலங்கை சிறையில் எங்களை கரூ.ப்பறையில் சங்கிலியால் கட்டிப்போட்டு துன்புறுத்தினர். இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்ட நாங்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மண்டபம் கடல் பகுதிக்கு வந்தோம். 15 மணி நேரத்திற்கு மேலாக கடலில் எங்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பட்டினியுடன் காக்க வைத்தனர்‘ என்றார். மீனவர்கள் காத்திருந்தது ஏன்? இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து வருகின்றன. இம்முறை தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்த தகவல் வெளியே தெரிந்தால் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் நடுக்கடலில் தமிழக மீனவர்களை 15 மணி நேரம் இந்திய கடலோர காவல்படையினர் காக்க வைத்தனர். நேற்று காலை கப்பலில் இருந்து படகு மூலம் மண்டபம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு பத்திரிக்கையாளர்கள் போட்டோ, பேட்டி எடுக்கவும் அனுமதிக்கவில்லை. மேலும், விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் மீனவர்களையும் சந்திக்க முடியாமல் உறவினர்கள் நீண்ட நேரம் தவித்தனர்

இந்து வாலிபர் முஸ்லிமாக மதமாற்றம்: நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு

 29 யூலை 2012,
இந்து வாலிபர் ஒருவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி, பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், குறிப்பாக இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், இந்து வாலிபர் சுனில் என்பவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி ஏஆர்ஒய் டிவி சேனலில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது. இதனால் சிறுபான்மை இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் மனித உரிமை சேவகர் அன்சார் பர்னே கூறுகையில், மயா கான் என்பவரும் எனது சகோதரர் சரீம் பர்னேவும் சேர்ந்து, இந்து வாலிபர் சுனிலை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக நடத்தி காட்டி உள்ளனர்.
இந்த மதமாதற்றம் ஒரு நாடகம். உண்மையிலேயே மதமாற்றத்துக்கு சுனில் விரும்பி இருந்தால், அதை நேரடியாக ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எனது அன்சார் பர்னே அறக்கட்டளையில் இருந்து சகோதரர் சரீம் பர்னேவை நீக்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அன்சார் பர்னே நடத்தும் அறக்கட்டளையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்தான் சுனில். மதமாற்றம் செய்யும் போது தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
மதமாற்றம் செய்த பின்னர், சுனிலுக்கு என்ன முஸ்லிம் பெயர் வைக்கலாம் என்றும் பார்வையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும் முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு மாதத்தில் மதமாற்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டொரண்டோவின் பிரபல ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

29 யூலை 2012,
டொரண்டோவில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் Cafe Le Monde என்ற ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் செயல்பட்டு வரும் Cafe Le Monde என்ற ஓட்டலின் அதிபர் Mohammad Reza(வயது 55) ஆவார். இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தர்.
இவர் மீது 20 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் Mohammad Rezaவை கடந்த 26ஆம் திகதி மாலை கைது செய்தனர்.
இதனையடுத்து இவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து இவர் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் மாணவரை சுட்டுக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

 29 யூலை 2012,
இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற பிரிட்டன் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த அனுஜ் பித்வி(வயது 23), பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்டேபில்டன்(வயது 21) என்ற நபர் திடீரென பித்வியை சுட்டுக் கொன்றான்.
இதன் பிறகு பொலிசார் ஸ்டேபில்டனை கைது செய்தனர். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே ஸ்டேபில்டன் மீதான கொலை வழக்கு, மான்செஸ்டரின் கிரவுன் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி திமோதி கிங் தன் தீர்ப்பில் குறிப்பிடுகையில், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாததால் ஏற்பட்ட விளைவு தான், கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது. ஸ்டேபில்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். 30 ஆண்டுகள் வரை ஸ்டேபில்டன் பரோலில் வெளிவர முடியாது என்றார்.
அனுஜ் பித்வியின் தந்தை சுபாஷ் குறிப்பிடுகையில், நேற்று நீதிமன்றத்திற்கு வந்த போது கூட ஸ்டேபில்டன் தான் செய்த குற்றத்துக்காக கவலைப்படாமல் அலட்சியமாக எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் என்றார்.

நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது பாகிஸ்தான்

நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது பாகிஸ்தான்
 29.யூலை 2012,
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளுக்குத் தேவையான எரிபொருட்கள் பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நேட்டோ படைகள் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தானிய வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்காத காரணத்தால், ஆப்கானிஸ்தானுக்கான பாதையை பாகிஸ்தான் மூடிவிட்டது.
இதனால் நேட்டோ படைகளுக்கான பொருட்களை விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார்.
அதன் பின் நேட்டோ படைகளுக்கான எரிபொருள் வாகனங்கள் செல்ல, பாகிஸ்தான் அனுமதியளித்தது.
இந்நிலையில் நேட்டோ வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியளித்தால், அந்த வாகனங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என தலிபான்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் பகுதியில் இந்த வாகனங்களை தகர்க்க முடியாத காரணத்தால், ஆப்கானிஸ்தானில் உஸ்பெகிஸ்தான் எல்லையையொட்டிய சமாங்கன் மாகாணத்தில் நேட்டோ வாகனங்கள் செல்லும் பாதையில் தலிபான்கள் கடந்த 18ஆம் திகதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
இதில் எரிபொருள் நிரப்பிய டாங்கர் லொறி வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீயில், அருகே இருந்த மற்ற 23 லொறிகளும் எரிந்து சாம்பலாகின.
இதற்கிடையே கடந்த 24ஆம் திகதி பெஷாவரில் நேட்டோ படைகளுக்கான வாகனத்தை ஓட்டிய டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இது போன்ற தாக்குதலை நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, நேட்டோ வாகனங்களுக்கான போக்குவரத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தெரியப்படுத்தியுள்ளது.

சீனாவில் பலத்த மழை, வெள்ளம்: 80 பேர் பலி

 29 யூலை 2012,
சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைகள் நிரம்பி வழிந்ததால், தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் தேசம் அடைந்தன.
இந்த மழை- வெள்ளத்திற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

ஒலிம்பிக் போட்டியைக் காண இரண்டு வருடமாக ரிக்ஷாவில் பயணம் செய்த சீனர்

29.07.2012ஒலிம்பிக் போட்டியைக் காண இரண்டு வருடமாக ரிக்ஷாவில் பயணம் செய்த சீனர்

ஒலிம்பிக் போட்டியைக் காண உலகெங்கும் உள்ள மக்கள் விமானம், கப்பல் என்று பல வழிகளிலும் சுலபமாக லண்டன் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால், சீன விவசாயி செங் குவாங்மிங், 2 ஆண்டுகால ரிக்ஷா பயணத்தின் மூலம், லண்டனை வந்தடைந்துள்ளார்.
2010ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், 16 நாடுகளை கடந்து 2 ஆண்டுகள் கடந்து தற்போது லண்டனை அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 57 வயதான நான், இதுவரைக்கும் சீனாவைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை.
தடகளப் போட்டிகளின் பெரும் ஆதரவாளரான நான், ஒலிம்பிக் போட்டியின் பெரு‌மையை உலகெங்கும் பரப்பும் விகிதமாக இப்பயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.




20 வயதில் 160 வயதினராகக் காட்சியளிக்கும் மனிதர்!

 

29.07.201220 வயதில் 160 வயதினராகக் காட்சியளிக்கும் மனிதர்!
ஐரோப்பாவின் அதிகமாக வயது முதிர்ந்த தோற்றத்தைக் கொண்ட நபராக காணப்படும் Dean Andrews என்பவர் வயது தொடர்பான அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 20 வயதாகும் இவர் 160 வயதில் காணப்படும் மனிதர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். Hutchinson-Gilford progeria என்ற நோயினால் பாதிக்கப்பட்டு வழமையான மனிதர்களை விட 8 மடங்கு அதிகமாக வயதாகி காணப்படுகிறார்.
இந்நோயினால் பிரித்தானியாவில் நான்கு பேரும், உலகம் முழுவதிலும் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புலிகள் இல்லாமையே

28.07.2012 மாணவர்கள் சீரழிவிற்கு காரணம்!-கல்விமான்கள் கவலை!


புலிகள் இல்லாமையே மாணவர்கள் சீரழிவிற்கு காரணம்!-கல்விமான்கள் கவலை!
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் தொடர் பணிப் புறக்கணிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார் இராசகுமாரன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் மாணவர்களது கல்வி கற்பதற்கான நிலை அவர்களது எண்ணம், சிந்தனைகள் திசை திருப்பப்பட்டுள்ளன.
மாணவர்கள் மன எழுச்சியுடன் இருந்து கல்வி கற்கும் நிலை சகல வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களில் போதுமான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அங்கு இருந்து மாணவர்கள் அமைதியாகக் கல்வி கற்கமுடியாத நிலைமை காணப்படுகிறது.
போதைவஸ்துப் பாவனை, மது பாவனை, புகைத்தல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பினாலேயே மாணவர் கவனம் இவ்வாறு திசை திருப்பப்பட்டு கல்வி நிலையிலிருந்து பலவீனமான நிலைக்கு கொண்டு செல்கிறது.
இந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் பட்சத்தில் மாணவர்கள் நல்ல நிலையை அடைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர்

27.07.2012கந்தசுவாமி கோயிலின் ஆண்டுப் பெருந்திருவிழா – (வீடியோ இணைப்பு)